திருமணம் ஆன பிறகு பெண்களின் வாழ்க்கை முறையே மாறிவிடும். பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு பல சவால்கள் காத்திருக்கும். கணவர் வீட்டாரை புரிந்துக்கொள்ளுதல், உறவினர்களுடனான அனுசரிப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஒரு சில வீடுகளில் கணவரின் பெற்றோர் அதாவது மாமனார், மாமியார் நன்றாக அமைந்துவிடுவார்கள். சிலருக்கு ஏழாம் பொருத்தம், மாமியார் மருமகள் இடையே சண்டை ஓயாது.
அப்படி வந்த சண்டையில் மருமகளை வீட்டை வீட்டு வெளியே செல்ல கணவரின் குடும்பத்தார் கூறியதையடுத்து, அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தொடர்ந்த வழக்கில் மாமனார், மாமியாரை துன்புறுத்தியதாக கூறி மருமகளை வீட்டை வீட்டு வெளியேற்ற முடியாது என்றும் மருமகள் மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் விவாகரத்து பெற்ற பின்பு பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது சரியானது. அதே நேரத்தில் விவாகரத்து ஆன பின்பு திருமணத்தின் போது பெண் வீட்டார் கொடுத்த சீதனத்திற்குக் கணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாட முடியாது என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust