” உங்களை வைத்து படம் இயக்க வேண்டும்” - விஜய் சேதுபதியிடம் கால்ஷீட் கேட்ட ஜெயம் ரவி!

Priyadharshini R

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது 'இறைவன்' படம். வாமணன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் தற்போது ஜெயம் ரவி வைத்து 'இறைவன்' படம் இயக்கியுள்ளார்.

ஜெயம் ரவியுடன் நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குநர் எச். வினோத், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, 'ஜெயம் ரவியின் போகன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அரவிந்த் சாமிக்கு பதிலாக முதல் நான்தான் நடிக்க இருந்தேன். ஆனால் கால்ஷீட் இல்லாததால் என்னால் நடிக்க முடியவில்லை.

சரியான கதை அமைந்தால் எதிர்காலத்தில் நானும் ஜெயம் ரவியும் இணைந்து நடிப்போம் என தெரிவித்தார் நடிகர் விஜய் சேதுபதி

இதனையடுத்து பேசிய ஜெயம் ரவி, ”நான் படம் இயக்கணும் என நினைத்த போது என் நினைவுக்கு வந்த முதல் நடிகர் விஜய் சேதுபதி தான்.”

உங்களை வைத்து படம் இயக்க ஆவலாக இருக்கிறேன். நீங்கள் கண்டிப்பாக எனக்கு கால்ஷீட்டை கொடுக்க வேண்டும் என விஜய் சேதுபதியிடம் ஜெயம் ரவி கேட்டார்.

ஜெயம் ரவிக்கு டைரக்ஷன் ஆசை இருப்பதை கேள்விப்பட்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 'இறைவன்' படம் வரும் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.