நயன்தாரா திருமணத்தை விட எங்களோட கல்யாணம் பரபரப்பாக பேச இதான் காரணம்! | Visual Story

Priyadharshini R

லிப்ரா புரடக்‌ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர்.

இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

ரவீந்தர் - மகாலட்சுமி திடீர் திருமணம் சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாகவே மாறியது. அதுமட்டுமின்றி இவர்களது திருமணத்தை ஏராளமானோர் ட்ரோல் செய்தும் வந்தனர்.

பணத்திற்கு ஆசைப்பட்டு தான் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்துகொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

தொடர்ந்து பேட்டி அளித்து இதற்கெல்லாம் பதிலடி கொடுத்து வருகிறது இந்த ஜோடி.

இந்நிலையில் ரவீந்தர் சந்திரசேகர் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.உருவக்கேலிக்காகவே எங்களது திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது. எங்களுக்கு முன்னர் உச்ச நட்சத்திரமான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.

அவர்களின் திருமணத்தை ஓடிடி-யில் வெளியிட காசு கொடுத்துள்ளனர். ஆனால் எங்களது திருமணத்தை வைத்து பலர் காசு பார்த்துள்ளனர் என்று அவர் பேசிருந்தார்.

தொடர்ந்து சில சீரியல் முக்கிய கேரக்டரில் வில்லியாகவும் நடித்து வந்த மகாலட்சுமி தற்போது அன்பே வா சீரியலில் வாசுகி என்ற வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார்.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சீரியல் நடிகையாக உயர்ந்தவர் மகாலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.