பொன்னியின் செல்வன் : ரஜினியை தேர்ந்தெடுக்காதது ஏன்? - மணிரத்னம் விளக்கம்

Antony Ajay R

தமிழ்நாட்டின் ஃபேவரைட் நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் பெரியபழுவேட்டையர் பாத்திரத்தில் நடிக்க விரும்பியதாகக் கூறினார்.

இப்போது சரத்குமார் அந்த பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்தை ஏன் அந்த பாத்திரத்தில் நடிக்க வைக்கவில்லை என விளக்கமளித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டாரை அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பது சரியானதல்ல என்று மணிரத்னம் கூறினார்.

ரஜினி - மணிரத்னம் - கமல் | டிவிட்டர்

அவரது ரசிகர்களை மனதில் கொள்ளாமல் எதையுமே செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டார்.

ரஜினி - மணிரத்னம் - கமல் | டிவிட்டர்

பெரிய பழுவேட்டையரின் கதாப்பாத்திரத்தை தனிப்படமாக எடுத்தால் அப்போது ரஜினி சாரை நடிக்க வைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.