Pushpa 2: மீண்டும் ’ஊ சொல்றியா மாமா?’ 5 கோடி ரூபாய் வாய்ப்பை மறுத்த சமந்தா - என்ன காரணம்?

Keerthanaa R

கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல், இந்திய அளவில் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த பாடலில் நடிகை சமந்தா நடித்திருந்தார். இந்த பாடலின் வீடியோ அல்லாமல், பாடல் மேக்கிங் வீடியோவும் அதிக ரசிகர்களை கவர்ந்தது.

சமூகத்தில் ஒரு பெண்ணின் மீது ஆணின் பார்வை எத்தகையது என்பது பாடலின் வரிகள், சாராம்சம். இதனால் இது ஆண்களை தாக்கும் விதமாக இருக்கிறது என்று சர்ச்சைகளும் எழுந்தன.

இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இரண்டாம் பாகத்திலும் ஊ சொல்றியா மாமா பாணியில் ஒரு பாடல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாடலிலும் இயக்குநர் சுகுமார் சமந்தாவை நடிக்கவைக்க அவரை அணுகியதாகவும், சமந்தா அதை மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த ஒரு பாடலுக்கு அவருக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டபோதிலும் நடிகை அந்த வாய்ப்பை மறுத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தன் கரியரின் இந்த நேரத்தில் ஸ்பெஷல் நம்பர்களில் (ஐட்டம் பாடல்கள்) நடிக்க விருப்பமில்லை என சமந்தா தெரிவித்துள்ளார்

samantha

|

Twitter

புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கினார். புஷ்பா திரைப்படம் பகத் ஃபாசிலுக்கு தெலுங்கில் முதல் படம்.

இத்திரைப்படம் ஆந்திர பிரதேசம் ராயலசீமா பகுதியில் இருக்கும் சேசாசலம் மலைப்பகுதியில் நடக்கும் செஞ்சந்தன மரக்கடத்தலை மையமாக கொண்டு எழுதப்பட்டது

தெலுங்கு அல்லாமல், புஷ்பா தி ரைஸ் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியிடப்பட்டு, ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.