அன்னை தெரசா பொன்மொழிகள்: இந்த வார்த்தைகள் உங்கள் வாழ்வை மாற்றும்!

Antony Ajay R

புன்னகையே
அன்பின் சின்னம்...
அதுவே நாம் பிறருக்குக்
கொடுக்கும் அழகிய பரிசு...

இறக்கத்தான் பிறந்தோம்

அதுவரை

இரக்கத்தோடு இருப்போம்.

வெறுப்பது யாராக இருந்தாலும்.

நேசிப்பது நீங்களாக இருங்க...

அன்பு சொற்களில் அல்ல வாழ்க்கையில் வடிவம் பெறுகிறது

கண்ணுக்குத் தெரிந்த

மனிதனை மதிக்காவிட்டால்...

கண்ணுக்குத் தெரியாத

கடவுளை மதித்தும் பயன் இல்லை...

குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது

எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில்

உங்கள் கஷ்டங்கள் மட்டும்

எப்படி நிரந்தரம் ஆகும்.?

தண்டனை கொடுப்பதற்குத்

தாமதம் செய்.

ஆனால்,

மன்னிப்பு கொடுப்பதற்கு

யோசனை கூட செய்யாதே.

அன்பு தான் உன் பலவீனம் என்றால்

இந்த உலகின் மிகச் சிறந்த

பலசாலி நீ தான்.

தன்னடக்கத்துடன் இருந்தால்

பாராட்டு மற்றும் அவமானம்

உங்களை பாதிக்காது

புன்னகையே அன்பின் ஆரம்பம்

Visual Story