Ishan Kishan 200: அதிவேக இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்த இளம் வீரர் | Visual Story

Keerthanaa R

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன்

பொறுமையாக விளையாடிய இஷான், 49 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் பின்னர் இவரும் அடித்து ஆட தொடங்கினார். 131 பந்துகளை சந்தித்து, 210 ரன்கள் எடுத்திருந்தார். 24 ஃபோர்கள் மற்றும் 10 சிக்ஸர்களை அடித்திருந்தார் இஷான்.

சிக்ஸர், ஃபோர் என பவுண்டரிக்கு பந்துகளை பறக்கவிட்டு, தனது முதல் ஒரு நாள் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். 126 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் இஷான்.

இது அவரது முதல் ஒரு நாள் இரட்டை சதமாகும். ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 7வது வீரரானார் இஷான். இரட்டை சதமடித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் இவரை வந்தடைந்தது.

அதிவேக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் புரிந்திருக்கிறார் இஷான் கிஷன். அடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் (138 பந்துகள்), இந்திய அணி வீரர் வீரேந்திர சேவாக் (140 பந்துகள்) ஆகியோர் உள்ளனர்.