பொன்னியின் செல்வன் : ஆதித்த கரிகாலன் குறித்த 5 முக்கிய விஷயங்கள்

Keerthanaa R

பராந்தக 'சுந்தர' சோழ சக்கரவர்த்தியின் மூத்த வாரிசு ஆதித்த கரிகாலன். சோழ சாம்ராஜ்ஜியத்தின் முடி இளவரசன்.

ஆதித்த கரிகாலனின் உற்ற தோழர்கள் இருவர் - பார்திபேந்திர பல்லவன், வந்தியத்தேவன்

சேவூர் போரில் பாண்டியனின் படையை வீழ்த்தியது சோழர் படை. ஆனால் பாண்டிய மன்னன் தப்பித்துபோய் பாலை நிலம் ஒன்றில் பதுங்கியிருந்தான். அவனை கண்டுபிடித்து தலைகொய்தான் ஆதித்த கரிகாலன். இதனால் 'வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி' என்ற பட்டத்தை பெற்றான்

காஞ்சியில் வாழ்ந்து வரும் இளவரசன் ஆதித்தன், அங்கு பொன் மாளிகை ஒன்றை நிறுவுகிறான். சோழ நாட்டையும், அரசரையும் ஆபத்து சூழ்ந்துள்ளதை அடுத்து, தந்தை சுந்தர சோழ சக்கரவர்த்தியையும் தாயார் வானமாதேவியையும் அங்கு தன் பாதுகாப்பில் வைத்துகொள்ள விரும்பி, வந்தியத்தேவன் மூலம் தூது அனுப்புகிறான்.

மற்றொரு புறம் வந்தியத்தேவனிடம், தன் தங்கை குந்தவைக்கும்  அவசர ஓலை ஒன்றை கொடுத்து அனுப்புகிறான். ஆதித்தனின் சிறுவயது காதல், நந்தினி. ராஜரீக காரணங்களினால் அது நிறைவேறாமல் போகிறது.