

யூடியூப் விமர்சகர் பயில்வான் ரங்கநாதனை கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடகி சுசித்ரா புகார் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் பாடகி சுசித்ரா ஒரு போதைப்பொருளுக்கு அடிமை என்றும், அவர் ஒரு முழு பைத்தியம் என்றும் யூடியூப் வீடியோவில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தார்.
இதனைக் கண்டு கோபமடைந்த சுசித்ரா, பயில்வான் ரங்கநாதனுக்கு தொலைப்பேசியில் அழைத்து, "இப்படி என்னைப் பற்றிப் பேச உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?"என்று, கோபமாகப் பேசியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த பயில்வான் உங்களின் முன்னாள் கணவர் கூறியதை தான், தான் பேசியிருப்பதாகவும், போலீஸில் புகார் அளித்தால் இப்படி தான் கூறுவேன் என்று சமாளித்தார்.
இந்நிலையில் பாடகி சுசித்ரா தன்னை பற்றி அவதூறாகப் பேசி வரும் நடிகரும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என சுசித்ரா புகாரில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே suchi leaks மூலமாக எனது தொழில் பாதிப்படைந்து, மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி அவதூறு கருத்து பரப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வல்லவன் படத்தில் அம்மாடி ஆத்தாடி, போக்கிரியில் டோலு டோலு, என் செல்லப்பேரு ஆப்பிள், யாரடி நீ மோகினி படத்தில் நெஞ்சை கசக்கி பிழிந்து போற, கந்தசாமி படத்தில் எக்ஸ்க்யூஸ் மிஸ்டர் கந்தசாமி, வேட்டைக்காரன் படத்தில் ஒரு சின்னத்தாமரை, சிறுத்தை படத்தில் ராக்கம்மா ராக்கு உள்ளிட்ட ஹிட் பாடல்கள் மூலம் பிரபலமானவர் பாடகி சுசி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust