வட கொரியா : உயிரை பணயம் வைத்து கரன்சியை கடத்திய இளைஞர் - எப்படி?

நியூசிலாந்தைச் சேர்ந்த ஜான் என்ற நபர், சமீபத்தில் வடகொரியாவின் கரன்சி நோட் ஒன்றை தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதை சில வருடங்களுக்கு முன்பு அந்நாட்டிலிருந்து கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார்.
North Korea Won
North Korea WonTwitter
Published on

வட கொரியாவின் ரூபாயை கடத்தியிருக்கிறார் நியூசிலாந்து இளைஞர் ஒருவர்.

வட கொரியாவுக்குள் மற்ற நாட்டவர்கள் செல்வது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் இங்கு ஒருவர் வட கொரியாவின் ரூபாயை அந்நாட்டிலிருந்து எடுத்துவந்துள்ளார். அதை தன் Red IT பக்கத்தில் அந்த நபர் பகிர, ஒரு புறம் அவரது இந்த சாகசத்தை பாராட்டி இதன் பின்னணியில் உள்ள கதையை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். இன்னொரு புறம் மக்கள், ஏன் தன் உயிரை பணயம் வைத்து இப்படி ஒரு காரியத்தை செய்தார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நியூசிலாந்தை சேர்ந்த ஜான் என்ற நபர், சமீபத்தில் வன்(வடகொரிய கரன்சி) நோட் ஒன்றை தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதை சில வருடங்களுக்கு முன்பு அந்நாட்டிலிருந்து கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார்.

"நான் இதை உள்ளூர் பஸ் டிரைவரிடம் இருந்து பண்டமாற்று முறையில் பெற்று, என் சாக்ஸிற்குள் மறைத்து எடுத்து வந்தேன்" என்றும் குறிப்பிட்டிருந்தார். ஜான் பகிர்ந்திருந்த புகைப்படத்தில் இருந்தது 5000 வட கொரியா வன்.

அந்த ரூபாய் நோட்டில் முன்னாள் வட கொரியா தலைவர் கிம் II சுங் இருந்தார். இவர் தான் வட கொரியா நாட்டை உருவாக்கிய தலைவர். அதுமட்டுமல்லாமல், தற்போது வட கொரியா தலைவராக இருக்கும் கிம் ஜாங் உன் அவருடைய பேரன் ஆவார்.

 கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்Pixabay

இவர் இதை பகிர்ந்ததிலிருந்து, 70 ஆயிரத்திற்கும் மேலான நபர்கள் லைக் செய்ய, பலரும் எந்த பொருளை கொடுத்து ஜான் இந்த ரூபாய் நோட்டை அந்த டிரைவரிடம் இருந்து பெற்றார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.

அதற்கு ஜான் கூறியதாவது, இந்த ஒரு 5000 வட கொரிய வனுக்கு நிகரான மதிப்புடைய 10 ரூபாய் நோட்டுகளை அந்த டிரைவரிடம் கொடுத்து இதை தான் பெற்றதாக தெரிவித்தார்.

North Korea Won
வட கொரியா: கிம் ஜாங் உன் வம்சத்தின் விறுவிறுப்பான கதை | பகுதி 1

மேலும் சிலர் ஜானின் இந்த பயணத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வந்தனர். வட கொரியாவின் மிக பிரபலமான சின்னம் ஒன்றாக கருதப்படும் ஆழமான சுரங்கப்பாதைக்கு ஜான் சென்றாரா? அந்த சுரங்கப்பாதையில் குழந்தைகள் பாடும் சத்தம் கேட்கிறதா? எனவும் கேள்விகளை ஒருவர் எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஜான், அப்படியான சுரங்கப்பாதை இருப்பது உண்மைதான் என்றாலும், குழந்தைகள் யாரும் அங்கு பாடுவதில்லை என்று தெரிவித்தார்.

அவர் பகிர்ந்த அந்த ரூபாய் நோட்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

North Korea Won
வட கொரியா : அணு ஆயுதங்களைக் களமிறக்கத் தயார் - என்ன சொல்கிறார் கிம் ஜாங் உன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com