Bakkiyalakshmi : கோபியை வெளுத்து வாங்கும் ஈஸ்வரி! - பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நெடுந்தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது. கோபி பாக்கியாவை விட்டு பிரிந்து, ராதிகாவை திருமணம் செய்ய மும்முரம் காட்டி வருகிறார்.
Bakkiyalakshmi

Bakkiyalakshmi

Hotstar

Published on

பாக்கியலட்சுமி தன் மாமனாரின் மருத்துவ செலவுகளை சமாளிக்க திருமண சமையல் ஆர்டர் ஒன்றை கையிலெடுத்து செய்து முடிக்கிறார். அந்த ஆர்டரில் சம்பாதித்த தொகையை அனைவருக்கும் பிரித்து கொடுக்காமல், வீட்டு செலவுக்கு பயன்படுத்துமாறு செல்வி பாக்யாவுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். பல இடங்களில் பாக்கியா, தன் வீட்டில் வேலை செய்யும் செல்வியை சொந்த தங்கை போன்று நடத்துவது ரசிக்க வைக்கிறது. செல்வி, பாக்யா மீது உள்ள அக்கறையில் கோபி-க்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டி, பாக்யாவை தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஆனால் பாக்யா செல்வி சொல்வதை நம்பாமல் கோபியை மலை போல நம்புகிறார். கடந்த சில எபிசோடுகளில் கோபியின் நடவடிக்கை பாக்யாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உடம்பு சரியில்லை என்று பாசாங்கு செய்து, ராதிகாவிடம் வீடியோ காலில் ரொமான்ஸ் செய்கிறார் கோபி.

NewsSense

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது பாக்யா தன்னை விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டதாக பில்ட் அப் கொடுத்து ராதிகா வீட்டுக்கு நைசாக நழுவி விடுகிறார் கோபி. மறு நாள் காலை வீட்டுக்குள் நுழையும் கோபியை, பாக்யா வழிமறித்து, `நைட் எங்கங்க போனீங்க’’ என்று அப்பாவித்தனமாக கேட்கிறார். வீட்டுக்குள் நுழையும் போதே கேள்வி கேட்பது எரிச்சலூட்டுவதாக கோபி திட்டுகிறார். பாக்யாவை கோபி திட்டி கொண்டிருப்பதை கவனித்த ஈஸ்வரி, பாக்யாவுக்காக தன் மகனையே திட்டுகிறார். பாக்யா கேட்பதில் தவறொன்றும் இல்லை என்று மருமகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் ஈஸ்வரி. எப்போதுமே பாக்யாவை திட்டி தீர்க்கும் ஈஸ்வரி, இன்று நம்மை திட்டுகிறாரே என்று அதிர்ச்சியில் உறைகிறார் கோபி.

இதற்கிடையில் ஜெனியின் அம்மா வீட்டுக்கு வந்த விஷயத்தை கோபியிடம் சொல்கிறார் பாக்யா. அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று குடும்பமாக அமர்ந்து பேசுகிறார்கள். இந்த காட்சி நாளை ஒளிபரப்பாகும். நாளைய எபிசோடின் புரோமோ வும் வெளியாகியுள்ளது, அதில் செழியன் ஜெனியை விவாகரத்து செய்யப் போவதாக சொல்ல, பாக்யா கோவத்தின் உச்சத்துக்கே சென்று, பளார் என்று செழியன் கன்னத்தில் அறை விடுகிறார். விவாகரத்து என்ற வார்த்தைக்கே இந்த அடி என்றால் தன் நிலைமை என்ன ஆவது என்று கோபி ஓரமாக திகைத்து நிற்கிறார்!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com