இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை - விரிவான தகவல்கள்

பிவிபி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
லிங்குசாமி
லிங்குசாமிTwitter
Published on

பிவிபி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்கு சாமிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எண்ணி ஏழுநாள் என்ற படத்துக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத விவகாரத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கார்த்தி, சமந்தா நடிக்கவிருந்த அந்த படத்துக்காக 2014ம் ஆண்டு லிங்கு சாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 1கோடியே 3 லட்சம் ரூபாய் பிவிபி கேப்பிடல்ஸ் நிறுவனத்திடம் கடனாக பெற்றது.

இந்த கடனை திரும்ப செலுத்தாததால் லிங்குசாமி மீது பிவிபி கேப்பிடல்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கு முடிவில் உயர்நீதிமன்றம் லிங்குசாமி பெற்ற கடனை திரும்ப செலுத்த உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து லிங்குசாமி 1 கோடியே 3 லட்சம் ரூபாய்கான காசோலையை வழங்கினார்.

லிங்குசாமி
நடிகர் விமல் மீது ரூ.5 கோடி பண மோசடி புகார்

ஆனால் அந்த வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்ப வந்தது. இதனால் பிவிபி நிறுவனம் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

லிங்குசாமி
விஷ்ணு விஷால் Vs சூரி : 2.7 கோடி ரூபாய் மோசடி வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com