RIP Kottayam Pradeep : விண்ணைத் தாண்டி வருவாயா, தெறி பட நடிகர் மாரடைப்பால் காலமானார்

2001-ம் ஆண்டு பிரபல மலையாள இயக்குநரான ஐ.வி.சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையின் அறிமுகமானார். அப்போது இவருக்கு வயது 40. கடந்த 20 ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கோட்டயம் பிரதீப்

கோட்டயம் பிரதீப்

Twitter

Published on

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கோட்டயம் பிரதீப் மரணம். அவருக்கு வயது 61. மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள இவர், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் மாமவாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர்.

2001-ம் ஆண்டு பிரபல மலையாள இயக்குநரான ஐ.வி.சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையின் அறிமுகமானார். அப்போது இவருக்கு வயது 40. கடந்த 20 ஆண்டிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சின்னதிரை தொடர்களிலும் நடித்துள்ள இவர், நகைச்சுவை மட்டுமில்லாது குணசித்திர பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான ஏசியாநெட் காமெடி விருது இவருக்கு வழங்கப்பட்டது. ‘ராஜமாணிக்யம்’, ‘2 ஹரிஹர் நகர்’, ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ உள்ளிட்ட படங்களில் இவரது நகைச்சுவை பிரபலம்.

<div class="paragraphs"><p>கோட்டயம் பிரதீப்</p></div>
Anu Emmanuel : நம்ம வீட்டு பிள்ளை மாங்கனி-க்கு சொந்த ஊர் அமெரிக்காவா? | Visual Stories
<div class="paragraphs"><p>கோட்டயம் பிரதீப்</p></div>

கோட்டயம் பிரதீப்

Twitter

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தைத் தொடர்ந்து ‘ராஜா ராணி’ படத்திலும் இவர் நடித்திருக்கிறார். விஜயின் தெறி, உதயநிதி ஸ்டாலினின் நண்பேண்டா, கொஞ்சம் கொஞ்சம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு மாயா என்ற மனைவியும், விஷ்னு சிவா என்ற மகனும், விண்டா என்ற மகளும் உள்ளனர்.

கோட்டயம் பிரதீப்-ன் மரணம் மலையாள திரையுலகிற்கு அதிர்ச்சிகரமானதாகவும், வருத்தம் மிகுந்ததாகவும் உள்ளது. அவரது தனித்துவமான நகைச்சுவையின் ரசிகர்கள் துக்கத்துடன் இரங்கல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com