The Elephant Whisperers: யானைகளின் தந்தையும் தாயுமான தம்பதி - ஆவணப்படம் உருவானது எப்படி?

இன்று உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கும் இந்த தம்பதி காட்டுநாயக்கர் பழங்குடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதியின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுக்கும் இருக்கும் உறவையும் பேசியது இந்த படம். இதனை கார்த்திகி கொன்சால்வ்ஸ் என்பவர் இயக்கியுள்ளார்.
The Elephant Whisperers: யானைகளின் தந்தையும் தாயுமான தம்பதி - ஆவணப்படம் உருவானது எப்படி?
The Elephant Whisperers: யானைகளின் தந்தையும் தாயுமான தம்பதி - ஆவணப்படம் உருவானது எப்படி?Twitter

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய படைப்புகளுக்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் விருதும், தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் படத்துக்கு ஆவணக் குறும்படத்துக்கான விருதும் கிடைத்துள்ளது.

தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் திரைப்படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள முதுமலை பகுதியில் யானைப் பராமரிப்பில் ஈடுபட்டுவரும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியைப் பற்றிய ஆவணப்படம் தான் எலிபண்ட் விஸ்பரர்ஸ்.

இன்று உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கும் இந்த தம்பதி காட்டுநாயக்கர் பழங்குடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தம்பதியின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுக்கு இருக்கும் உறவையும் பேசியது இந்த படம். இதனை கார்த்திகி கொன்சால்வ்ஸ் என்பவர் இயக்கியுள்ளார்.

கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயற்கை, சுற்றுசூழல், வன விலங்குகள், பழங்குடி மக்கள் பற்றி புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துவருகிறார். புகைப்பட பத்திரிகையாளராகவும், இயக்குநராகவும் இருக்கிறார்.

கார்த்திகி மற்றும் அவரது நண்பர்கள் அடிக்கடி முதுமலைக் காட்டுக்கு பயணித்திருக்கின்றனர். இதன் மூலம் பொம்மன் மற்றும் பெள்ளி அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது.

அந்த நேரத்தில் காட்டில் தாயைப் பிரிந்து உடலில் அடிபட்ட காயங்களுடன், வால் வெட்டுபட்டு ஒரு யானைக் குட்டி கண்டெடுக்கப்படுகிறது.

முதுமலைக் காப்பகத்தில் யாரும் அந்த யானைக்குட்டியை காப்பற்ற முடியும் என எண்ணவில்லை. அது இறந்துவிடும் என்றே நினைத்திருக்கின்றனர்.

ஆனால் பொம்மன் அப்போது முன்வந்து யானைக் குட்டியை தான் தேற்றுவதாக உறுதியளித்திருக்கிறார். அவருடன் பெள்ளியும் உதவி செய்ய முன்வந்துள்ளார்.

ரகு எனப் பெயரிட்டு அந்த யானையை தங்களது குழந்தையாக வளர்த்துள்ளனர் பொம்மனும் பெள்ளியும்.

The Elephant Whisperers: யானைகளின் தந்தையும் தாயுமான தம்பதி - ஆவணப்படம் உருவானது எப்படி?
யானை சாணத்திலிருந்து எடுக்கப்பட்ட காபி கொட்டை - இவ்வளவு விலையா? - பாகம் 1

இந்த தருணத்தில் கார்த்திகா பொம்மன் மற்றும் பெள்ளியை சந்தித்து யானையுடன் அவர்களைப் படம் பிடிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். அப்படித்தான் தொடங்கியிருக்கிறது இந்த ஆவணப்படம்.

50 வயதைத் தாண்டிய பொம்மனும் பெள்ளியும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். பெள்ளி அம்மு என்ற மற்றொரு யானைக் குட்டியை வளர்க்கத் தொடங்குகிறார். பொம்மன், பெள்ளி, அம்மு, ரகு நால்வரும் ஒரு குடும்பமாகிறார்கள்.

The Elephant Whisperers: யானைகளின் தந்தையும் தாயுமான தம்பதி - ஆவணப்படம் உருவானது எப்படி?
பாலியல் சுற்றுலா, பௌத்தம், யானைகள் - 'தாய்லாந்து' பூலோக சொர்க்கமாக இருக்க என்ன காரணம்?

இரண்டு ஆண்டுகள் இந்த ஆவணப்பட படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. பல நாட்கள் கார்த்திகி நண்பர்களுடன் வந்து காலையும் மாலையும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்.

ஆவணப்படம் ஆஸ்கர் வென்றது குறித்து பிபிசி தளத்தில் பேசிய பொம்மன், "ஆவணப்படத்தை எடுத்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு இந்த நேரத்தில் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். ரகுவும் அம்முவும் தற்போது எங்களுடன் இல்லை என்பதும் சிறிது வருத்தமாக உள்ளது" எனக் கூறியிருக்கிறார்.

The Elephant Whisperers: யானைகளின் தந்தையும் தாயுமான தம்பதி - ஆவணப்படம் உருவானது எப்படி?
கம்போடியா : உலகின் தனிமையான யானை கான்வா நிலை இப்போது இதுதான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com