Vijayakanth: "வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி" - ரஜினிகாந்த் பேசியது என்ன?

நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த். அனைவர் மீதும் விஜயகாந்த் கோபப்படுவார். ஆனால், அவரது கோபத்துக்குப் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும்.
Vijayakanth: "வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி" - ரஜினிகாந்த் பேசியது என்ன?
Vijayakanth: "வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி" - ரஜினிகாந்த் பேசியது என்ன?Twitter

விஜயகாந்த் மரண செய்தி அறிந்த உடனேயே தூத்துக்குடியில் படப்படிப்பை நிறுத்தினார் ரஜினிகாந்த். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்தவர், “விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. அசாத்தியமான மன உறுதி கொண்ட ஒரு மனிதர். எப்படியும் உடல்நிலை தேறி வந்துவிடுவார் என்று எல்லாரும் நினைத்தோம். ஆனால், சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழுவில் அவரை பார்த்தபோது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை குறைந்துவிட்டது. அவர் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழக மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். அந்த பாக்கியத்தை மக்கள் இழந்துவிட்டனர். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்”

இன்று காலை தீவுதிடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செய்தார் ரஜினி காந்த். பின்பு செய்தியாளர் சந்திப்பில், "கேப்டன் என்பது விஜயகாந்த்துக்கு மிகவும் பொருத்தமான பெயர். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த். அவரது நட்புக்கும் அன்புக்கும் என்றும் நிகரே கிடையாது. சுயநலமில்லாதவர் விஜயகாந்த். அவரது அன்புக்கு எவர் ஒருவரும் அடிமையாகிவிடுவர். அனைவர் மீதும் விஜயகாந்த் கோபப்படுவார். ஆனால், அவரது கோபத்துக்குப் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும்.

நான் ராமசந்திரா மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருந்த போது அங்கிருந்த கூட்டம் அத்தனையையும் வெளியேற வைத்து உதவினார். நடிகர் சங்கம் நிகழ்ச்சி மலேசியாவில் நடந்த போது கூடிய கூட்டத்தினால் எல்லாரும் திகைத்துவிட்டோம். பவுன்சர்கள் கூட திணறிய கூட்டத்தில் விஜயகாந்த் நுழைந்து என்னை பூ மாதிரி அழைத்துவந்தார். "அண்ணா உங்களுக்கு ஒன்னுமில்லையே" என அவர் கேட்டதை மறக்க முடியாது.

71 பந்துகள் பல சிக்சர்கள், பௌண்டரிகள் நூறுக்கும் மேல் ரன்கள் குவித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். விகெட்டையும் இழந்தது உலகம் என்ற ஃபீல்டை விட்டு போய்விட்டார்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்? விஜயகாந்த். வாழ்க விஜயகாந்த் நாமம்" எனப் பேசினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com