Sundari : சுந்தரி இன்றைய எபிசோட்! - மல்லிகாவின் ஸ்கெட்சில் வசமாக சிக்கிய கார்த்திக்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலிலும் சுந்தரி சீரியலிலும் மட்டும் தான் நாயகிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகள் கிடைத்துவிடுகிறது. அதனால் தான் இந்த சீரியல் ப்ரோமோக்கள் தவறாமல் யூ டியூப் டிரெண்டிங்கில் இடம் பிடித்து வருகின்றன.
சுந்தரி இன்றைய எபிசோட்! - மல்லிகாவின் ஸ்கெட்சில் வசமாக சிக்கிய கார்த்திக்
சுந்தரி இன்றைய எபிசோட்! - மல்லிகாவின் ஸ்கெட்சில் வசமாக சிக்கிய கார்த்திக்NewsSense
Published on

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சுந்தரி-கார்த்திக் திருமண விவகாரம் அனுவின் அம்மாவுக்கு தெரிந்து ருத்ர தாண்டவம் ஆடி விடுகிறார். 

 விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலிலும் சுந்தரி சீரியலிலும் மட்டும் தான் நாயகிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகள் கிடைத்துவிடுகிறது.  அதனால் தான் இந்த சீரியல் ப்ரோமோக்கள் தவறாமல் யூ டியூப் டிரெண்டிங்கில் இடம் பிடித்து வருகின்றன. 

சுந்தரி இன்றைய எபிசோட்! - மல்லிகாவின் ஸ்கெட்சில் வசமாக சிக்கிய கார்த்திக்
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை

அனுவின் அம்மா மல்லிகா போட்ட ஸ்கெட்சில் வசமாக சிக்கி விடுகிறார் கார்த்திக். மல்லிகாவாக நடிக்கும் பிரேமி வெங்கட் நடிப்பில் அசத்துகிறார். மல்லிகாவை பார்த்தாலே கார்த்திக் பயந்து ஓடுகிறார். அந்த அளவுக்கு பார்வையாலே மிரட்டுகிறார். தன் வளர்ப்பு மகள் அனுவின் கணவர் கார்த்திக் ஏதோ திருட்டுத்தனம் செய்கிறார் என்பதை உணர்ந்த மல்லிகா, மகளின் வாழ்க்கையை மீட்க போராடுகிறார். கடந்த சில எபிசோடுகள் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்தன. தற்போது கார்த்திக்கின் தில்லு முள்ளு வேலைகளை முற்றிலும் கண்டுபிடித்து விட்டார் மல்லிகா. சுந்தரி தான் கார்த்திக் மனைவி என்பது மல்லிகாவுக்கு தெரிய வந்தவுடன், சுந்தரியையும் தப்பாக நினைத்து விடுகிறார். சுந்தரியை வீட்டுக்கு அழைத்து திட்டுகிறார். பாவம் சுந்தரி, என்ன சொல்வதென்று தெரியாமல் தவிக்கிறார். சுந்தரி தன் தரப்பு நியாயத்தை சொல்ல வரும் போது, அனுவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து விடுகிறார். அனைவரும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கு சுந்தரி தன் தரப்பு நியாயத்தை மல்லிகாவிடம் சொல்கிறார். அனுவுக்கு எத்தனை முறை தான் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று தெரியவில்லை. பல எபிசோடுகளில் மருத்துவமனையில் தான் இருக்கிறார்.

இனி சுந்தரியும், மல்லிகாவும் இணைந்து கார்த்திக்கை ஒரு வழியாக்க போகின்றனர். மேலும் சுந்தரி சித்து இடையே மீண்டும் நல்ல நட்பு மலர்கிறது. இனி வரும் எபிசோடுகள் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com