விவாகரத்துக்கு பிறகும் டாட்டூவை அழிக்க விரும்பாத நாக சைதன்யா - சமந்தா முடிவு என்ன?

இந்த டாட்டூ இப்போதும் இருவரது கையிலும் இருக்கிறது. விவாகரத்து ஆனதால் இந்த டாட்டூக்களை இவர்கள் எடுத்துவிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Samantha - Naga Chaithanya
Samantha - Naga ChaithanyaTwitter
Published on

பிரபல நட்சத்திர ஜோடி சமந்தா நாக சைதன்யா கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டனர். நான்கு வருடங்களுக்குப் பிறகு, கடந்த 2021ல் இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருவரும் மீண்டும் இணையவேண்டும் எனக் கோரிக்கைகள் கூட வந்தது.

samantha
samanthaTwitter

தங்களது விவாகரத்து குறித்து இருவரும் எந்த ஊடகத்திலும் பெரிதாக பேசவுமில்லை. இந்நிலையில் கடந்த மாதம் ஒளிபரப்பான காபி வித் கரன் 7வது சீசனில், சமந்தாவிற்கும் தனது முன்னாள் கணவருக்கும் இடையில் உறவு எப்படியிருக்கிறது என்று தொகுப்பாளர் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த சமந்தா, எங்களை ஒரே அறையில் விட்டால் கூர்மையான பொருட்களை அங்கு வைக்கவேண்டாம் என தெரிவித்தார்.

இதனையடுத்து நாக சைதன்யாவும், தான் இப்போது தன்னை ஒரு புது மனிதனாக பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

இவர்கள் இருவரும் விவாகரத்தை அறிவித்து பல மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும், இந்த முன்னாள் நட்சத்திர ஜோடி குறித்த பேச்சுகள் ரசிகர்கள் மத்தியில் ஓய்ந்தபாடில்லை. இவர்கள் இருவரும் காதலித்து வந்த போது ஒரே மாதிரியான டாட்டூ ஒன்றை கையில் வரைந்துகொண்டனர்.

Samantha - Naga Chaithanya
புகைப்படங்களை அகற்றிய சமந்தா - இதுதான் காரணம்

இந்த டாட்டூ இப்போதும் இருவரது கையிலும் இருக்கிறது. விவாகரத்து ஆனதால் இந்த டாட்டூக்களை இவர்கள் எடுத்துவிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் நாக சைதன்யா தனது கையில் இருக்கும் ஒரு டாட்டூ குறித்து பேசியபோது, அது அவர்களது திருமண நாளின் தேதி என்று தெரிவித்தார். மார்ஸ் கோட் ஆக வரையப்பட்டிருக்கும் இந்த டாட்டூவை எடுக்கும் நோக்கமில்லை எனவும் தெரிவித்தார்.

சைதன்யாவை போலவே சமந்தாவும் தனது முன்னாள் கணவரின் நினைவாக மூன்று டாட்டூக்களை கொண்டுள்ளார்.

ஒன்று இருவரும் இணைந்து போட்டுக்கொண்ட வைகிங்க்ஸ் டாட்டூ. அடுத்தது, YMC என்ற டாட்டூ ஒன்றை தனது பின் கழுத்தில் வரைந்துகொண்டுள்ளார். இது சமந்தா-நாகசைதன்யா முதன் முதலில் இணைந்து நடித்த ஏம் மாய சேஸாவே ( தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா) திரைப்படத்தின் ஆங்கில பெயருடைய முதல் மூன்று எழுத்துகள்.


மூன்றாவது டாட்டூ, தனது முன்னாள் கணவர் சைதன்யாவின் பெயரான Chay என்பது. இந்த மூன்று டாட்டூக்களும் தனது முன்னாள் கணவரின் நினைவாக அவர்கள் பிரியும் முன் இவர் வரைந்து கொண்டது. சைதன்யா தனது டாட்டூவை அழிக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ள நிலையில், சமந்தா இது குறித்து என்ன செய்யப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்

Samantha - Naga Chaithanya
நாக சைதன்யா குறித்த கேள்விக்கு சமந்தா பதில் : ”கூர்மையான பொருட்களை மறைத்து வைக்கணும் ”

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com