சித்துவிடம் திருமணமான விஷயத்தை சுந்தரி மறைத்தது ஏன்?

பெரிய டிவிஸ்ட், கடுப்பில் ரசிகர்கள் சுந்தரி சீரியலில் நாயகிக்கு எதிராக கார்த்திக் செய்த சதியால், ஒட்டுமொத்த குடும்பமும்  பெரிய பிரச்சனையில் மாட்டி கொண்டது.
Gabriella Sellus

Gabriella Sellus

Twitter

Published on

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் டாப் கியரில் நகர்கிறது. படிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட கிராமத்து பெண் சுந்தரியும், பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கார்த்திக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமண பந்தத்தில் நுழைகிறார்கள். கார்த்திக்கின் அக்காவுக்கு, முருகன் இக்கட்டான சூழலில் வாழ்க்கை கொடுக்கிறார். இதனால் முருகனின் நெருங்கிய நண்பரின் மகளான சுந்தரியை கார்த்திக் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான். ஆனால் சுந்தரி மீது ஆரம்பம் முதலே வெறுப்பை காட்டுகிறார். யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு சென்று பணக்காரப் பெண்ணான அனுவை  திருமணம் செய்து கொள்கிறார்.

<div class="paragraphs"><p>Sundari Serial</p></div>

Sundari Serial

Facebook

சுந்தரியும் கலெக்டர் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வருகிறார். கொஞ்ச நாட்களில் கார்த்திக் அனுவை திருமணம் செய்திருப்பது தெரிந்து விடுகிறது.  நிறம் குறைவாக இருப்பதால் உன்னை பிடிக்கவில்லை என சுந்தரியிடம் சொல்கிறார் கார்த்திக். உடைந்து போன சுந்தரிக்கு அவரின் ஹவுஸ் ஓனர் அக்கா ஆறுதலாக இருக்கிறார். சுந்தரிக்கு அனுவை பிடிக்கும் என்பதால், அவர் கர்ப்பமான விஷயம் தெரிந்து, சந்தோஷப்படுகிறார். கார்த்திக் தனக்கு செய்த துரோகத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார். 

சுந்தரிக்கு சித்து நல்ல நண்பராக இருக்கிறார். இது ஆரம்பத்தில் இருந்தே கார்த்திக்கு பிடிக்கவில்லை. சுந்தரிக்கு திருமணம் ஆனது தெரியாமல் சித்து காதலிக்கிறார். இதனால் சித்துவின் அப்பா சுந்தரியின் குடும்பத்தாரிடம் பெண் கேட்க முடிவெடுக்கிறார். எதேர்ச்சையாக கார்த்திக்கிடமே சுந்தரியை சித்துவுக்கு பெண் கேட்க வேண்டும், அவளின் அப்பா யார் என்று கேட்க, கார்த்திக் சித்துவை பழிவாங்கும் எண்ணத்தில் முருகனை கை காட்டி விடுகிறார். நேற்றைய எபிசோடில் சித்துவின் அப்பா, முருகனிடம் சென்று சுந்தரியை பெண் கேட்க கலவரம் வெடிக்கிறது. முருகன் சித்துவின் அப்பாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். சித்துவின் அப்பா ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்பதால் இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது.

<div class="paragraphs"><p>Gabriella Sellus</p></div>
'Bigg Boss Tamil' fame Samyuktha joins the cast of Sundar C's family Entertainer
<div class="paragraphs"><p>Sundari Serial</p></div>

Sundari Serial

Newssense

முருகனை போலீஸ் கைது செய்கிறது. இதற்கிடையில் சுந்தரியை தலை மீது தூக்கி வைத்து கொண்டாடிய குடும்பம், திருமண ஆனதை சித்துவிடன் மறைத்து பழகியதாக திட்டி தீர்க்கின்றனர். இதனால் மனமுடைந்து போகிறார் சுந்தரி, தன் மாமாவை ரிலீஸ் செய்ய வேண்டி, சித்துவின் அப்பாவிடமே செல்கிறார். அங்கு சென்று சித்துவை கடுமையாக திட்டுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரிந்து விடும்.

சுந்தரி சித்துவிடம் தனக்கு திருமணம் ஆனதை ஏன் சொல்லவில்லை என்பதே குடும்பத்தினரின் கேள்வியாக இருக்கிறது. சுந்தரியின் திருமண வாழ்க்கையே இல்லாமல் ஆகிவிட்டதால், அதை பற்றி ஏன் சொல்லி கொண்டு என்று நினைத்திருக்கலாம். பாசிடிவான காட்சிகளுடன் நகர்ந்து வந்த சீரியலில் சுந்தரி மீது வீண் பழி வந்துவிட்டதால் ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.

<div class="paragraphs"><p>Sundari Serial</p></div>

Sundari Serial

Newssense

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com