பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? Twitter

தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசு தான். இந்த திருநாளில் புத்தாடை அணிந்து வகைவகையான உணவுகளை ருசித்து, பட்டாசு வெடித்து மகிழ்வோம்.

பட்டாசு இல்லாத தீபாவளியை யோசித்துக் கூட பார்க்க முடியாது, ஆனால் அதனை வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாரா நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்படுகிறது.

தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

வீட்டிற்கு வெளியே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

பட்டாசு வெடிக்கும் பகுதியில் ஒரு வாளி தண்ணீர் வைக்க வேண்டும், பெரிய தீ ஏற்பட்டால் அணைக்க உதவும்.

தீப்பெட்டியுடன் நேரடியாக பட்டாசுகளை கொளுத்த வேண்டாம்; அவற்றை மெழுகுவர்த்தியால் அல்லது ஊதுபத்தியால் பற்றவைக்கலாம்.

பட்டாசு வெடிக்கும் போது பஞ்சு எளிதில் தீப்பிடிக்கும் என்பதால் பருத்தி ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

தீக்காயம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ்கட்டி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது இரத்த உறைவுக்கு வழிவகுத்து, இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

கொப்புளங்கள் இருந்தால், அந்த இடத்தின் தோலை உரிக்க வேண்டாம். ஏனெனில் அது எரிந்த இடத்தில் தொற்று அபாயத்தை அதிகரிக்க செய்யும்.

தீக்காயம் பட்டவுடன், கிருமி நாசினி, டெட்டால், டிஞ்சர் , மாவு உள்ளிட்டவைகளை அந்த காயத்தில் போடக்கூடாது. இதனால் செப்டிக் ஆக வாய்ப்புண்டு.

கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டால், ஆடைகள் தோலில் ஒட்டிக்கொண்டால், அவற்றை அகற்ற முயற்சிக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இது ஒரு பெரிய காயமாக மாறும்.

தேங்காய் எண்ணெயை எரிந்த இடத்தில் தடவினால் அதிகப்படியான எரிச்சல் குறையும். ஆனால் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தால், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

துளசி இலைகளை அரைத்து அதன் பேஸ்ட்டை எரிந்த இடத்தில் தடவினால் சருமம் குளிர்ச்சியாகி எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சாற்றை எரிந்த இடத்தில் தினமும் தடவினால் சருமத்தில் உள்ள தீக்காயங்கள் மாறலாம்.

உருளைக்கிழங்கு மற்றும் கேரட் சாறு எரியும் உணர்வுக்கு பயனுள்ளதாக இருக்கும். உருளைக்கிழங்கு அல்லது கேரட்டை பச்சையாக அரைத்து அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். இது எரிச்சலில் இருந்து நிவாரணம் தரும்.

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
சென்னை டூ சிக்மகளூர் : இந்த தீபாவளி லீவுக்கு பட்ஜெட் ட்ரிப் செல்ல தயாரா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com