விந்தணுக்களை அதிகரிக்கும் மூலிகை பூக்கள்

சில நாட்களிலே காய்ந்து உதிரும் பூக்கள் மூலம் வைத்தியம் செய்யலாம். பூக்கள் தரும் பலன்கள் ஏராளமானவை. நம் அருகில் சுற்றியுள்ள மரங்களில் உள்ள பூக்களைக் கண்டால் அதை எடுத்துப் பயன்படுத்துங்கள்
விந்தணுக்களை அதிகரிக்கும் மூலிகை பூக்கள்
விந்தணுக்களை அதிகரிக்கும் மூலிகை பூக்கள்NewsSense

சில நாட்களிலே காய்ந்து உதிரும் பூக்கள் மூலம் வைத்தியம் செய்யலாம். பூக்கள் தரும் பலன்கள் ஏராளமானவை. நம் அருகில் சுற்றியுள்ள மரங்களில் உள்ள பூக்களைக் கண்டால் அதை எடுத்துப் பயன்படுத்துங்கள். எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது இந்தப் பூக்கள். இதன் மூலம் சிறு பிரச்சனைகள் முதல் பெரிய உடல் தொந்தரவுகள் வரை அனைத்தையும் சரிசெய்யலாம். என்னென்ன பூக்களை எப்படிப் பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

<div class="paragraphs"><p><strong>வாழைப்பூ</strong></p></div>

வாழைப்பூ

Twitter

நம் ஊர் மரங்களில் கிடைக்கின்ற பூக்கள்

வாழைப்பூ

வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் காலத்தில் வரும் வலி, ஒழுங்கற்ற மாதவிலக்கு, கர்ப்பப்பை நோய்கள் சரியாகும். இதன் முழுமையான பலன் கிடைத்திட இதில் எண்ணெய் சேர்க்கவே கூடாது. மற்ற வாழைப்பூக்களைவிட மொந்தன் வாழைப்பூவே அதிக நன்மைகளைக் கொடுக்கும்.

விந்தணுக்களை அதிகரிக்கும் மூலிகை பூக்கள்
யானை சாணத்திலிருந்து எடுக்கப்பட்ட காபி கொட்டை - இவ்வளவு விலையா? - பாகம் 1
<div class="paragraphs"><p>முருங்கைப்பூ</p></div>

முருங்கைப்பூ

Facebook

முருங்கைப்பூ

பருப்பு சேர்த்தோ பாலில் அவித்தோ சாப்பிட வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும். விந்து எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஆண்கள் சாப்பிட்டு வர விரைவில் விந்து எண்ணிக்கை கூடும். முருங்கைப்பூவை மோரில் சமைத்தும் சாப்பிடலாம்.

<div class="paragraphs"><p>எலுமிச்சைப் பூ</p></div>

எலுமிச்சைப் பூ

Twitter


எலுமிச்சைப் பூ

எலுமிச்சம் பூவை மைபோல அரைத்து சிறிது எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் சேர்த்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளும் உட்கொண்டு வந்தால் ஈறு நோய்கள் குணமாகும். பல்வலியும் சரியாகும்.

<div class="paragraphs"><p>மாதுளம் பூ</p></div>

மாதுளம் பூ

Facebook

மாதுளம் பூ

மாதுளம் பூவைப் பாலில் போட்டு கொதிக்க வைத்து, பூ வெந்ததும் வெளியே எடுத்துவிடவும். ஆறியதும் பாலில் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இதுபோல, தொடர்ந்து 8 நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும். இந்த மருந்து உட்கொள்ளும் நாட்களில் காரம் உணவுகள், எண்ணெய் உணவுகள், கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது அவசியம்

<div class="paragraphs"><p>மாம் பூ</p></div>

மாம் பூ

Twitter

மாம் பூ

மாம்பூவை ரசம் வைத்து சாப்பிட, நல்ல செரிமான சக்தி உண்டாகும். செரிமான இயக்கம் சீராகும். மாம்பூவுடன் பச்சைக் கொத்துமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து சேர்த்து லேசாக வதக்கி, துவையல் போல சாப்பிட உமட்டல் பிரச்சனை சரியாகும்.

<div class="paragraphs"><p>பனம் பூ</p></div>

பனம் பூ

Twitter

பனம் பூ

பனம் பூவை இடித்துச் சாறு பிழிந்து 300 மி.லி சாறு எடுக்கவும். அதனுடன் 100 மி.லி எலுமிச்சை பழச்சாறையும் இரண்டு கிராம் உப்பையும் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி குணமாகும்.

<div class="paragraphs"><p>மருதோன்றிப்பூ</p></div>

மருதோன்றிப்பூ

Facebook 

மருதோன்றிப்பூ

பூவின் காம்புகளை முதலில் நீக்கிவிட வேண்டும். தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் நல்ல தூக்கம் வரும். தூக்கம் வராமல் அவதிப்படுவர்கள், இதை முயற்சிக்கலாம். மேலும், 300 கிராம் பூக்களை 500 கிராம் வேப்ப எண்ணெயில் போட்டுத் தைலமாகக் காய்ச்சி அந்தத் தைலத்தைப் பக்கவாத நோயால் அவதிப்படுபவர்களுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

<div class="paragraphs"><p>வேப்பம் பூ</p></div>

வேப்பம் பூ

Facebook 

வேப்பம் பூ

வேப்பம் பூவை சேகரித்து நிழலில் உலர்த்திக் கொள்ளவேண்டும். மண் பானையில் இவற்றைப் போட்டு மூடி வைக்கவும். 30 நாட்கள் கழித்து லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பூவின் அளவுக்கு ஏற்றது போலக் காய்ந்த கறிவேப்பிலையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் மீண்டும் இடித்துச் சிறிது உப்பு சேர்க்கவும். தினமும் காலை உணவுக்கு முன், இதில் ஒரு தேக்கரண்டி சாப்பிட வேண்டும். இதுபோலத் தொடர்ந்து உண்டால் வாந்தி, உமட்டல், இழுப்பு, வயிறு உப்புசம், வயிற்றுப்புழுக்கள் ஆகியவை நீங்கிவிடும். இந்த மருந்தை சாப்பிடும் நாட்களில் எண்ணெய் உணவுகள், கிழங்கு வகைகள், கார உணவுகள், கடலை உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

<div class="paragraphs"><p>புளியம் பூ</p></div>

புளியம் பூ

Facebook 

புளியம் பூ

இப்பூக்கள் பித்தத்தைப் போக்கும் தன்மை கொண்டது. தேவையான அளவு புளியம்பூக்களை எடுத்து அதனுடன் சிறிது மிளகு, கொத்துமல்லி சேர்த்து அரைத்துக் காலையில், மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்ட பித்த உமட்டல் நீங்கும். பசியும் ஏற்படும். செரிமானம் சீராகும். மேலும், இப்பூக்களைப் பருப்பு சேர்த்தும் சமைக்கலாம். ரசமாக வைத்தும் சாப்பிட இதே பலன்கள் கிடைக்கும்.

<div class="paragraphs"><p>வில்வப்பூ</p></div>

வில்வப்பூ

வில்வப்பூ

வில்வப்பூவை நிழலில் உலர்த்தி இசித்துக் கொள்ளவும். தினமும் 3 வேளைகளில் அதில் ஒரு தேக்கரண்டி அளவு தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். இந்த மருத்துவத்தை 18 வயதினருக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பின்பற்ற வேண்டும். சிறுவர்கள் தவிர்க்கலாம்.

<div class="paragraphs"><p>தேற்றான் கொட்டை மரப்பூ</p></div>

தேற்றான் கொட்டை மரப்பூ

Twitter

தேற்றான் கொட்டை மரப்பூ

பூவை அரைத்துத் தேனில் குழைத்து உட்கொண்டால் உடல் வலுவடையும். நோஞ்சானாக, பலவீனமாக இருப்பவர்களுக்கும் உடல் தேறும்.

<div class="paragraphs"><p>செண்பக மரப்பூ</p></div>

செண்பக மரப்பூ

Facebook

செண்பக மரப்பூ

பூக்களை நல்லெண்ணெய்யில் பிசைந்து நெற்றிப்பொட்டி பற்றுப்போட்டால் தலைவலி சரியாகும். மூட்டு வலிக்கு இதைத் தடவி வர வலி குணமாகும்.

<div class="paragraphs"><p>வாகைப்பூ</p></div>

வாகைப்பூ

Twitter

வாகைப்பூ

வாகைப்பூவை நிழலில் உலர்த்தி மாப்போல இடித்து ஒரு தேக்கரண்டி தூளில் இரண்டு தேக்கரண்டி தேனைக் கலந்து காலையில் சாப்பிடுவதற்கு முன் சாப்பிட வேண்டும். தொடர்ந்து இதுபோல 20 நாட்களுக்குச் சாப்பிட்டு வர சுவாச நோய்களும் சளி தொந்தரவும் சரியாகும். ரத்தமும் சுத்தமாகும். இப்பூக்களை அரைத்துக் கட்டிகள் மேல் பற்றுப்போட கட்டிகள் குணமாகும்.

<div class="paragraphs"><p>மரமல்லிப்பூ</p></div>

மரமல்லிப்பூ

Facebook

மரமல்லிப்பூ

மரமல்லிகைப் பூவின் மணம் உடல்நலத்துக்கு நல்லதல்ல. ஆனால், காய்ந்த பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.

<div class="paragraphs"><p>சரக்கொன்றை பூ</p></div>

சரக்கொன்றை பூ

Newssense

சரக்கொன்றை பூ

சரக்கொன்றை பூவை எலுமிச்சம் பழச்சாறுவிட்டு அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் தேமல், சொறி, கரப்பான் ஆகிய தோல் தொந்தரவுகள் சரியாகும். 100 கிராம் சரக்கொன்றை பூவை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி சூடு ஆறியதும் குடிநீர்போலப் பருகி வந்தால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

<div class="paragraphs"><p>இலுப்பைப் பூ</p></div>

இலுப்பைப் பூ

Twitter

இலுப்பைப் பூ

இலுப்பை பூவை அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் வைத்துக்கட்டி வந்தால் வீக்கம் குணமாகும். காய்ந்த பூக்களைச் சிறிது வதக்கி சூட்டோடு ஒற்றடம் கொடுத்தால் வீக்கம் வடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com