Health : வெறும் வயிற்றில் ஏன் பப்பாளி பழம் சாப்பிடக்கூடாது?
பழங்களை நாள்தோறும் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது என்றாலும் சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.
அந்த வகையில் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடக்கூடாது என கூறுகின்றனர். என்ன காரணம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
செரிமானக் கோளாறு
பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதில் பப்பெய்ன் என்சைம்கள் அதிகளவில் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தும், இதனால் வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
சர்க்கரை அளவு அதிகரிக்கும்
பப்பாளியில் இயற்கையாகவே சர்க்கரை அதிகம் உள்ளது, இது வெறும் வயிற்றில் தனியாக சாப்பிடும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும். நீரிழிவு நோயாளிகள் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம்.
இதய பிரச்சனை
பப்பாளி சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். ஆனால் நீங்கள் ஏற்கனவே ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், பப்பாளி பழத்தைத் தவிர்ப்பது நல்லது
ஒவ்வாமை இருப்பவர்கள்
லேடெக்ஸ் ஒவ்வாமை இருப்பவர்கள் பப்பாளி சாப்பிடக் கூடாது. பப்பாளியில் சிட்டினேஸ் எனப்படும் என்சைம்கள் இருப்பதால் இது எதிர்வினை ஏற்படுத்தலாம். இதனால் தும்மல், சுவாசிப்பதில் சிரமம், இருமல் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust