கார்த்திகேயா ஜாகர்
கார்த்திகேயா ஜாகர் Twitter

12 வயதில் மூன்று செயலிகளை உருவாக்கிய சிறுவன் - இந்தியாவில் ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ்?

இந்த ஆப்ஸ் மூலமாக 45,000 மாணவர்கள் இலவசமாகப் பயன்பெறுவதாகக் கூறினார்.
Published on

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மூன்று செயலிகளை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சாதனைக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் படி, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கார்த்திகேயா ஜாகர் மூன்று லேனிங் அப்களை உருவாக்கியுள்ளார்.

கொரோனா பெரும் தொற்று வந்த போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு இணைய வழிக் கல்வி கட்டாயமானது இதற்காக கார்த்திகேயாவின் தந்தை ரூ 10,000 மதிப்புள்ள மொபைல் ஃபோனை வாங்கி கொடுத்துள்ளார்.

ஆனால் சில நாட்களில் மொபைல் போனில் சில சிக்கல்கள் வரத்தொடங்கியது அதனை யூடியூப்பின் உதவியுடன் சரிசெய்து படிப்பைத் தொடர்ந்துள்ளார். அப்போதுதான் மூன்று லேர்னிங் அப்களை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இது குறித்து அந்த சிறுவன் கூறுகையில்,

இந்த கொரோனா காலத்தில் நான் மூன்று அப்களை உருவாக்கினேன் முதல் செயலி லூசண்ட் ஜி.கே. பொது அறிவு தொடர்பானது.

இரண்டாவது செயலி கோடிங் மற்றும் கிராஃபிக் டிசைனிங் கற்பிக்கும் கல்வி தொடர்பானது. மூன்றாவது ஆப் ஸ்ரீ ராம் கார்த்திக் டிஜிட்டல் கல்வி. இப்போது, ​​இந்த ஆப்ஸ் மூலமாக 45,000 மாணவர்கள் இலவசமாகப் பயன்பெறுவதாகக் கூறினார்.

12 வயதில் அப்களை உருவாக்கி சாதனை படைத்த கார்த்திகேயா ஜாகரை பலரும் பாராட்டி வருகின்றனர் ஹரியானா முதல்வர் இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஹரியானா இளைஞர்கள் தொழில்நுட்பத்திலும் உலகளவில் பிரகாசிக்கிறார்கள்,” என்று கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com