மூன்று குண்டுகள் துளைத்து இந்திய இராணுவத்தின் 2 வயதான நாய் மரணம் - என்ன நடந்தது?

இந்த மோப்ப நாயின் உடலில் கேமிராக்களைப் பொருத்தி தீவிரவாதிகள் இருக்கும் இடங்களை கண்காணித்து வந்ததாக காவலர்கள் என்டிடிவி ஊடகத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.
Dead Dog
Dead DogTwitter
Published on

ஜம்மு காஷ்மிர் மாநிலம் பரமுல்லா என்ற இடத்தில் இந்திய இராணுவம் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையிலான மோதலின் போது இராணுவத்தின் இரண்டு வயது மோப்ப நாய் இறந்த செய்தி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த மோப்ப நாயின் உடலில் கேமிராக்களைப் பொருத்தி தீவிரவாதிகள் இருக்கும் இடங்களை கண்காணித்து வந்ததாக காவலர்கள் என்டிடிவி ஊடகத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.

வனிகம் என்ற கிராமத்தில் நேற்று காலை நடந்த சண்டையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

அந்த கிராமத்தில் 1 பாகிஸ்தானியர் உட்பட 3 தீவிரவாதிகள் ஒளிந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகளை கண்காணிக்க பஜாஜ் அக்ஸெல் என இரண்டு நாய்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையிலான தீவிர துப்பாக்கிச்சூட்டின் முடிவில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். இரண்டு பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர்.

Dead Dog
இந்திய போலீஸின் துப்பறியும் நாய்கள் : நம்மை காக்கும் 8 உளவாளிகள்

மூன்று துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் அக்ஸெல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

அக்ஸெலின் உடல் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Dead Dog
ஆயிரக்கணக்கான மனிதர்களை காத்த நாய் குட்டி - ஒரு சூப்பர் ஹீரோ கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com