சாதிவாரி கணக்கெடுப்பு: காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு - ராகுல் செய்த தக்லைஃப் சம்பவம்!

பிகாரைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, சாதிவாரி கணக்கெடுப்பு மக்களை பிரிக்கும் செயல் என விமர்சித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் இதற்கு நேரமாறான முடிவை எடுத்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு: காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு - ராகுல் செய்த தக்லைஃப் சம்பவம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு - ராகுல் செய்த தக்லைஃப் சம்பவம்!Twitter

டெல்லி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நாடுமுழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் செயற்குழு நிபந்தனை அற்ற ஆதரவு தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அறிவித்தார்.

அக்டோபர் 9ம் தேதி நடந்த இந்த சந்திப்பில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆலோசித்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய விவாதங்கள் இருந்துவருகிறது. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளார் முதல்வர் நிதிஷ் குமார்.

இதனைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, சாதிவாரி கணக்கெடுப்பு மக்களை பிரிக்கும் செயல் என விமர்சித்துள்ளார்.

ஆனால் காங்கிரஸ் இதற்கு நேரமாறான முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய ராகுல் காந்தி, "நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு செய்யும் சிந்தனைக்கு நிபந்தனையற்றன் ஆதரவு வழங்க காங்கிரஸ் செயற்குழு முடிவு செய்துள்ளது. இது முன்னேற்றத்துக்கான வழி. எங்கள் முதலமைச்சர்களும் (ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம்) ஆலோசித்து வருகின்றனர்.

"பாஜக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நாங்கள் அழுத்தம் கொடுப்போம். ஏனெனில் நாட்டின் நலனுக்கு அது அவசியமாகிறது. இந்தியா கூட்டணியில் ஆலோசித்தவரை பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் என நினைக்கிறேன். சில கட்சிகள் ஆதரவு அளிக்காமலும் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை." எனவும் ராகுல்காந்தி பேசினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு: காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு - ராகுல் செய்த தக்லைஃப் சம்பவம்!
ராகுல் காந்தி : "மன்னிப்பு கேட்கப்போவதில்லை, என் பெயர் சாவர்கர் அல்ல" - என்ன பேசினார்?

பத்திரிகையாளர் சந்திப்பில் ஏன் சாதிவாரியான கணக்கெடுப்பு முக்கியம் என்ற கேள்விக்கு, பத்திரிகையாளர்களிடம் இங்கு எத்தனை பேர் பழங்குடியினர் எனக் கேட்டார். பத்திரிகையாளர்கள் யாரும் கை தூக்கவில்லை.

பட்டியலின மக்கள் எத்தனை பேர் எனக் கேட்டார். அப்போதும் யாரும் கையுதர்த்தவில்லை.

தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் எத்தனை பேர் எனக் கேட்டார். அப்போதும் யாரும் கை தூக்கவில்லை.

அவரே, "இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. உண்மை தெரியவேண்டும்" என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு: காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு - ராகுல் செய்த தக்லைஃப் சம்பவம்!
பொற்கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தியை விமர்சித்த அசாம் முதல்வர் - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com