புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை - என்ன காரணம்?

புதுச்சேரியில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதித்தனர்.
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை - என்ன காரணம்?
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை - என்ன காரணம்?Twitter

பல்வேறு இடங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருவதை பார்த்திருப்போம், குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, சுற்றுலா இடங்களில் வட மாநில இளைஞர்கள் பல்வேறு நிறங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த பஞ்சு மிட்டாயை புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரியில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதித்தனர்.

இது குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,

  • புதுச்சேரியில் அடர் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் "ரோடமின்-பி" என்ற நச்சுப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

  • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுகி தரச்சான்று பெற்று பஞ்சு மிட்டாய் விற்பனையை தொடங்கலாம்.

  • மீறுபவர்கள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை - என்ன காரணம்?
புதுச்சேரி : ஒரே மாதத்தில் 3வது முறை; சிவப்பு நிறமாக மாறும் கடல் நீர் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com