ராஜஸ்தான் : இந்த கிராமத்தில் வசிக்கும் எல்லாருக்கும் ஒரே பெயரா! பின்னணி என்ன?

இனானா கிராமத்தில் 4,400க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட சுமார் 10,000 மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கூட ஏனானியன் என்ற குடும்பப்பெயரை வைத்திருக்கிறார்கள்.
Rep Image
Rep ImageTwitter

உலகின் பல இடங்கள் தனக்கென தனித்துவமான கதைகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இருக்கும்,  பல்வேறு கிராமங்கள் அதன் தனித்துவமான கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன.

அந்த வகையில் ராஜஸ்தானில் உள்ள இந்த குறிப்பிட்ட கிராமம், மனிதநேயம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் உள்ள இனானா கிராமம் வகுப்புவாத பிரிவினையை மிஞ்சியுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பல ஆண்டுகளாக ஒரே குடும்பப்பெயர்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

அறிக்கைகளின்படி, இனனா கிராமத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கும்ஹர், மேக்வால், சென், ஜாட் அல்லது ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அனைவரும் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் உள்ள ஏனானியன் என்ற ஒரே குடும்பப் பெயரைக் கொண்டுள்ளனர்.

இதற்கு பின்னணியில் ஒரு வரலாறும் இருக்கிறது. 1358 ஆம் ஆண்டு சோப்ராஜின் மகன் இந்தர் சிங்கின் ஆட்சி நடந்தது. இந்தர் கிராமத்தை நிறுவியவர்.

கதையின் படி இந்த கிராமத்தில் 12 சாதிகள் மற்றும் 12 பண்ணைகள் ஒன்றாக இருந்தன. மேலும் அவை கூட்டாக இனானா என்று அழைக்கப்பட்டன. இந்த பெயர், உண்மையில், இந்தர் சிங்கின் பெயரிலேயே சூட்டப்பட்டது. அப்போதிருந்து, மக்கள் இப்போது வரை அதே குடும்பப் பெயரைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

Rep Image
ருமேனியா: வெறும் 6 கோடி விலைக்கு வரும் அழகிய கிராமம் - என்ன சிறப்பு?

இனானா கிராமத்தில் 4,400க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட சுமார் 10,000 மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கூட ஏனானியன் என்ற குடும்பப்பெயரை வைத்திருக்கிறார்கள். இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் ஒரே சமூகமாக ஒன்றுபட்டிருப்பதால், கிராமத்தில் இந்து, முஸ்லீம் என்று பிரிவுகளே இல்லை.

இந்த கிராமத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இங்கு யாரும் மது அருந்துவதில்லை. இந்த கிராமத்தில் எந்த குற்றமும் நடந்தது இல்லை என்று கூறப்படுகிறது.

மதுபானம் வாங்குபவர்களுக்கு ரூ.11,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இனானா கிராமத்தில் தடைசெய்யப்பட்ட மற்ற பொருட்கள் குட்கா மற்றும் புகைபிடிக்கும் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Rep Image
கேரளா: அல்லி மலர்களால் உயிர்ப்பிக்கப்படும் கிராமம் - மலரிக்கலில் என்ன அதிசயம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com