"ட்விட்டர் கணக்குகளை முடக்க சொல்லி மோடி அரசு மிரட்டியது" - முன்னாள் ட்விட்டர் CEO பகீர்!

'நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யவில்லை என்றால் இந்தியாவில் ட்விட்டரை மூடுவோம்', உங்கள் அலுவலகங்களை மூடுவோம்', 'உங்கள் ஊழியர்களின் வீடுகளில் சோதனை (ரைடு) நடத்துவோம்' என்றெல்லாம் நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். இதுதான் ஜனநாயகமா? என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
Former Twitter CEO Jack Dorsey alleges pressure from Indian government during farmers’ protest
Former Twitter CEO Jack Dorsey alleges pressure from Indian government during farmers’ protestTwitter
Published on

விவசாயிகளின் போராட்டத்தின் போது மத்திய அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மோடி அரசு மிரட்டல் விடுத்ததாக ட்விட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் பிரேக்கிங் பாயின்ட்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் ஜாக் டோர்சியிடம், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு அரசாங்கங்களிலிருந்து அவர் பெற்ற அழுத்தங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

முன்னாள் ட்விட்டர் CEO ஜாக் டார்ஸி
முன்னாள் ட்விட்டர் CEO ஜாக் டார்ஸிTwitter

அதற்கு பதிலளித்த ஜாக் டோர்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது தொடர்பாக பதிவுகளைப் பதிவிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மோடி அரசு அழுத்தம் கொடுத்ததாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது,

"நான் ட்விட்டர் CEOவாக பொறுப்புவகித்திருந்த சமயத்தில் பல வெளிநாட்டு அரசுகள் நிறைய நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கொடுத்திருக்கின்றன.

எடுத்துகாட்டாக இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று எங்களுக்கு அழுத்தங்களை கொடுத்தனர்.

Former Twitter CEO Jack Dorsey alleges pressure from Indian government during farmers’ protest
ஹிண்டர்பெர்க் அட்டாக் : தப்பிப்பாரா முன்னாள் ட்விட்டர் CEO Jack Patrick Dorsey? Explained

'நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யவில்லை என்றால் இந்தியாவில் ட்விட்டரை மூடுவோம்', உங்கள் அலுவலகங்களை மூடுவோம்', 'உங்கள் ஊழியர்களின் வீடுகளில் சோதனை (ரைடு) நடத்துவோம்' என்றெல்லாம் நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். இதுதான் ஜனநாயகமா? என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதையடுத்து, ட்விட்டரின் முன்னாள் CEO-வாக இருந்த ஜாக் டோர்சி ட்விட்டருக்குப் போட்டியாக ‘Bluesky’ என்ற செயலியை அறிமுகப்படுத்தி அதை மேம்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Former Twitter CEO Jack Dorsey alleges pressure from Indian government during farmers’ protest
ட்விட்டர் நிறுவனர் வெளியிட்ட Bluesky செயலி - எலான் மஸ்குக்கு ஆப்பா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com