குஜராத்: "மனுஸ்மிருதி படியுங்கள்" - 17 வயது சிறுமியின் கருவை கலைக்க நீதிபதி மறுப்பு

குஜராத் உயர்நீதிமன்றத்தில் புதன் கிழமை நடந்த வழக்கில் நீதிபதி சமீர் தவே, சிறுமியும் கருவும் ஆரோக்கியமாக இருந்தால் கலைக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத்: "மனுஸ்மிருதி படியுங்கள்" - 17 வயது குழந்தையின் கருவை கலைக்க நீதிபதி மறுப்பு
குஜராத்: "மனுஸ்மிருதி படியுங்கள்" - 17 வயது குழந்தையின் கருவை கலைக்க நீதிபதி மறுப்பு twitter
Published on

17 வயது சிறுமியின் 7 மாத கருவை கலைக்க அனுமதிக் கோரும் வழக்கில் மனுஸ்மிரிதியை உதாரணமாகக் காட்டி” அந்த காலத்தில் 17 வயதில் பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்வது இயல்புதான்” என குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 16 வயது 11 மாதங்கள் நிறைந்த சிறுமி, இப்போது 7 மாத குழந்தையை வயிற்றில் சுமந்து வருகிறார். 

கருவானது 24 வாரங்களைக் கடந்துவிட்டால் கலைப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதி அவசியம். அந்த சிறுமியின் தந்தை கருவை கலைப்பதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

புதன் கிழமை நடந்த வழக்கில் நீதிபதி சமீர் தவே, சிறுமியும் கருவும் ஆரோக்கியமாக இருந்தால் கலைக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தந்தையின் வழக்கறிஞர் சிறுமியின் வயது காரணமாக கவலைப்படுவதாக வாதாடினார். அப்போது நீதிபதி தவே, “நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்வதனால் தான் இந்த கவலை வருகிறது”  எனக் கூறியிருக்கிறார்.

“உங்கள் அம்மா, பாட்டியைக் கேட்டுப்பாருங்கள். 14-15 என்பது திருமணம் செய்யும் வயது. 17 வயதில் முதல் குழந்தைப் பெற்றுக்கொள்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று…. இதுவரை இல்லாவிட்டாலும், நீங்கள் மனுஸ்மிருதியை ஒருமுறை படிக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார் தவே.

இந்நிலையில், சிறுமிக்கு பிரசவ தேதி ஆகஸ்ட் 16 என கணித்துள்ளனர். இதனால் தான் அறையில் மருத்துவர்களுடன் அலோசித்ததாக நீதிபதி கூறியுள்ளார். அவர், “சிறுமிக்கோ அல்லது கருவிலோ ஏதாவது பாதிப்பு இருந்தால் கருவை கலைப்பது குறித்து பரிசீலிக்கலாம். இருவரும் ஆரோக்கியமாக இருந்தால் அத்தகைய தீர்ப்பை அளிப்பது நீதிமன்றத்துக்கு சிரமமான காரியம்” எனவும் தெரிவித்துள்ளார்.

குஜராத்: "மனுஸ்மிருதி படியுங்கள்" - 17 வயது குழந்தையின் கருவை கலைக்க நீதிபதி மறுப்பு
விவாகரத்துக்குப் பின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவ ரீதியாக கருவை அகற்றுவது சிறுமிக்கு உகந்ததாக இருக்குமா என்பதை சோதிக்க ராஜ்கோட் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு நீதிம்னறம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியின் வயதை தீர்மானிக்கும் ossification test செய்ய வேண்டும் எனவும் சிறுமியின் மன நலத்தை கண்காணிக்க மனநல மருத்துவர் ஒருவர் உடனிருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த விசாராணை வரும் 15ம் தேதி நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதற்குள் மருத்துவ சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குஜராத்: "மனுஸ்மிருதி படியுங்கள்" - 17 வயது குழந்தையின் கருவை கலைக்க நீதிபதி மறுப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கேட்ட விவேக் அக்னிஹோத்ரி - கண்டித்த உயர் நீதிமன்றம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com