நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை! மருத்துவர்கள் சொல்லும் காரணம் என்ன?

குழந்தை தற்போது கமலா ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவர் தாகட் கூறியுள்ளார்.
குழந்தை (Representational)
குழந்தை (Representational)Pixabay

மத்திய பிரதேசத்தின் குவாலியர் பகுதியில் பெண் குழந்தை ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த புதன் கிழமையன்று, ஆர்த்தி குஷாவா என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோது 2.3 கிலோ எடையில் இருந்ததாகவும், ஆரோக்கியமாகவே இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் ஜெயரோக்யா மருத்துவமனை குழுமத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.கே.எஸ் தாகட் ஏஎன்ஐயிடம் கூறுகையில்,

“குழந்தை பிறக்கும்போது நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. சில நேரங்களில் கருக்கள் கூடுதலாக பிரியும். இது மருத்துவ மொழியில், இஸ்கியோபாகஸ் என்று அழைக்கப்படுகிறது.” என்றார்

மேலும் “உருவாகும் கரு இரண்டு பகுதிகளாக பிரிந்து, உடல் இரண்டு இடங்களில் வளர்ச்சி அடைகிறது. அப்படி தான் இந்த பெண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியில் இரண்டு கூடுதல் கால்கள் வளர்ந்துள்ளது. ஆனால் அந்த கால்கள் செயலற்ற நிலையில் உள்ளன.” எனவும் தெரிவித்திருக்கிறார்.

குழந்தை (Representational)
பிலிபைன்ஸில் பிறந்த உலகின் 800 கோடியாவது குழந்தை; மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா

குழந்தையை கண்காணிப்பில் வைத்துள்ள மருத்துவர்கள், அவளது உடலில் வேறு பிரச்னைகள் இருக்கிறதா என்று பரிசோதித்து வருகின்றனர்.

குழந்தைக்கு உடலில் வேறு பிரச்னை இல்லை என்றால் அந்த கூடுதல் கால்களை அகற்றிவிடுவோம். அப்போது அவள் மற்றவரை போல இயல்பாக இருக்க முடியும் எனவும் கூறியுள்ளார் மருத்துவர் தாகட்

குழந்தை தற்போது கமலா ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவர் தாகட் கூறியுள்ளார்.

சமீபத்தில் மெக்சிகோவில் ஒரு பெண் குழந்தை வாலுடன் பிறந்திருந்தது. இதேபோல மத்திய பிரதேசத்தின் ரத்லம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று இரண்டு தலைகள், மூன்று கை, இரண்டு கால்களுடன் பிறந்துள்ளது.

அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏஎன்ஐயிடம் கூறுகையில், குழந்தையின் தாய் கர்ப்பமாக இருந்தபோது ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருப்பதாக தோன்றியது.

ஆனால், ஒரு குழந்தை மட்டுமே பிறந்தது எனவும், அதுவும் இரு தலைகள், மூன்று கை, இரண்டு கால்கள், இரு முதுகெலும்புகள் மற்றும் ஒரு வயிற்றுடன் பிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த குழந்தையின் ஆயுள் மிகவும் குறைவு என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது மிகவும் அரிதான சம்பவம் எனவும், இதனை மருத்துவ துறையில், Dicephalic Parapagus எனக் குறிப்பிடுவோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

குழந்தை (Representational)
McDonald's குளியலறையில் பிறந்த பெண் குழந்தை - வினோதமாக பெயர் வைத்த பெற்றோர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com