Manipur: ஒரு கையில் துப்பாக்கி, மறுகையில் புத்தகம் - தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்!

குக்கி பகுதி மாணவர்கள் வன்முறைப் பதட்டம் காரணமாக கிராமங்களின் எல்லையில் பதுங்கு குழிகள் அமைத்துள்ளனர். ஷிஃப்ட் கணக்காக துப்பாக்கியை ஏந்திக்கொண்டு கிராமத்தை பாதுகாத்துக்கொண்டே படிக்கவும் செய்கின்றனர்.
Manipur: ஒரு கையில் துப்பாக்கி, மறுகையில் புத்தகம் - தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்!
Manipur: ஒரு கையில் துப்பாக்கி, மறுகையில் புத்தகம் - தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்!Twitter

மணிப்பூரில் இன்றளவும் அமைதி நிலவாத சூழல் தொடர்கிறது. குக்கி-மெய்தி மக்கள் இடையிலான மோதல்கள் அவ்வப்போது வெடித்து வருகிறது.

இந்த நிலையில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை நடத்த முடிவு செய்துள்ளது அந்த மாநிலத்தின் உயர்கல்வி கவுன்சில் (COHSEM).

சமீபத்தில் மணிப்பூரில் கலவரம் வெடிக்க காரணமாக இருந்த நீதிமன்ற தீர்ப்பின் பகுதியை ரத்து செய்து அறிவிப்பு வெளியானது. இது குக்கி மக்களுக்கு ஆறுதல் தருவதாக இருந்தாலும் வன்முறை எழுந்துவிடும் பதட்டத்தைக் குறைக்கவில்லை.

மலைப்பிரதேசங்களில் இருக்கும் குக்கி மக்கள் வசிக்கும் கிராமங்கள் அச்சத்தின் பிடியில் இருந்து மீளவில்லை.

மணிப்பூரில் குறைந்தபட்சம் 5,000 மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

36,000 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், ஆர்ட்ஸ் பிரிவில் 8,100 பேர், அறிவியலில் 22,631 பேர், வணிகவியல் பிரிவில் 620 பேர் என மொத்தம் 31,351 மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கு கொள்கின்றனர்.

இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 111 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 மலைப்பிரதேச மாவட்டங்களில் 36 மையங்களும் 6 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் 75 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆபத்தான பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 3 மையங்கள் ரத்து செய்யப்பட்டு, பாதுகாப்பான பகுதிக்கு மாணவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

தேர்வுகளை பாதுகாப்பாகவும் நியாயமான முறையில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதனால் தேர்வுகளை மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

குக்கி பகுதி மாணவர்கள் வன்முறைப் பதட்டம் காரணமாக கிராமங்களின் எல்லையில் பதுங்கு குழிகள் அமைத்துள்ளனர். ஷிஃப்ட் கணக்காக துப்பாக்கியை ஏந்திக்கொண்டு கிராமத்தை பாதுகாத்துக்கொண்டே படிக்கவும் செய்கின்றனர்.

Manipur: ஒரு கையில் துப்பாக்கி, மறுகையில் புத்தகம் - தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்!
மணிப்பூர் முழுவதும் AFSPA அமல் ஏன்? 5 மாதங்களாக தொடரும் வன்முறை - விரிவான தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com