Indian Railways : ஏன் ரயில்களுக்கு மட்டும் 2 ஓட்டுனர்கள்? எவ்வாளவு நேரம் வேலை செய்வார்கள்?

என்ன தான் டெக்னாலஜிகள் பல கண்டுபிடித்தாலும் ரயிலை மனிதர்கள் இயக்குவது தான் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் வைத்து ரயிலை இயக்கும் ஓட்டுநர்கள் லோகோ பைலட்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 2 டிரைவர்கள் இருப்பர்.
ஏன் ரயில்களுக்கு மட்டும் 2 ஓட்டுனர்கள்?  இத்தனை நாள் இதை யோசிக்கலையே!
ஏன் ரயில்களுக்கு மட்டும் 2 ஓட்டுனர்கள்? இத்தனை நாள் இதை யோசிக்கலையே!Twitter

ரயில் சேவை இந்தியாவில் பொது மக்களுக்கு மிகவும் பொதுவான மற்றும் சிக்கனமான போக்குவரத்து வழிமுறையாகும்.

ஒரு பெரிய நெட்வொர்க்குடன், இந்திய ரயில்வே நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நீண்டுள்ளது. ரயில்கள் பற்றி உங்களில் பலருக்குத் தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. ரயில்களை இயக்க ஏன் 2 டிரைவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வேலை நேரம் என்ன என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

என்னதான் டெக்னாலஜிகள் பல கண்டுபிடித்தாலும் ரயிலை மனிதர்கள் இயக்குவது தான் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் வைத்து ரயிலை இயக்கும் ஓட்டுநர்கள் லோகோ பைலட்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 2 டிரைவர்கள் இருப்பர். தலைமை லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட் என்று அவர்கள் அழைக்கப்படுவர்.

இந்த இரண்டு ஓட்டுநர்கள் மட்டும் தான் ரயிலை ஆரம்பம் முதல் இறுதி வரை இயக்குகிறார்களா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமாக 100 கிலோமீட்டர் வாகனத்தை ஓட்டி சென்றாலே, அலுப்பு தெரியும். அத்தனை நூறு கிலோமீட்டர்கள் செல்லும் ரயிலை எப்படி இருவர் மட்டும் இயக்க முடியும்.

இரண்டு ஓட்டுநர்கள் மட்டும் தொடர்ந்து அத்தனை மைல் தூரம் ரயிலை இயக்கினால் உடல் சோர்வடைந்து, எதாவது தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. அது பெரிய விபத்துக்கு வழிவகுக்கும்.

அதில் பயணிக்கும் மக்களின் நிலை என்னவாகும். பாதுகாப்பு கருதி ஓட்டுனர்கள் மாற்றப்படுவார்கள். ஆனால் எவ்வளவு தூரத்துக்கு ஒரு முறை மாற்றப்படுவார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா?

ஏன் ரயில்களுக்கு மட்டும் 2 ஓட்டுனர்கள்?  இத்தனை நாள் இதை யோசிக்கலையே!
Indian Railways: 13 மணிநேர வேலை; கழிவறை கூட பிரச்னை - ரயில் ஓட்டுநர்களின் கஷ்டங்கள் என்ன?

ரயில் ஓட்டும் லோகோ பைலட்டுக்கும் ஒரு நாளில் 8 மணிநேரம் மட்டுமே வேலை என்றாலும், தேவைக்கு ஏற்ப, நேரம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் ஓட்டுநர்கள் 4 மணி நேர ஷிப்ட் மட்டுமே செய்வார்கள். அதே ஓட்டுநர் சில சமயங்களில் 9 மணிநேரம் அல்லது அதற்கு மேல் கூட வேலை செய்ய நேரிடுமாம்.

8 மணி நேரம் முடிந்துவிட்டது என ஓட்டுநர்கள் ரயிலை பாதியிலே நிறுத்த முடியாது தானே. டிரைவர் ஷிப்ட் முடிந்து விட்டாலும் அடுத்த நிர்ணயிக்கப்பட்ட ஸ்டேஷன் வரும் வரை அவர்கள் தான் வண்டியை ஓட்டி செல்வர். அடுத்த நிறுத்தம் வரும் வரையான கூடுதல் நேரம் ஓவர் டைம் என்று கணக்கிடப்படும். இந்த கூடுதல் நேரத்துக்கு ஓட்டுநருக்கு தனியாக ஊதியம் வழங்கப்படும்.

அப்போ மும்பை, டெல்லி போன்ற நீண்ட தூரம் பயணம் கொண்ட ரயில்கள் எல்லாம் எத்தனை ஓட்டுனர்கள் மாறுவார்கள் என்று நினைத்து பாருங்க.

ஏன் ரயில்களுக்கு மட்டும் 2 ஓட்டுனர்கள்?  இத்தனை நாள் இதை யோசிக்கலையே!
ஊட்டி: 208 வளைவுகள், 250 பாலங்கள் கடக்கும் மலை ரயில் - இந்தியாவின் slowest train இது தான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com