Infosys : ”தவறு செய்துவிட்டேன்”- 40வது ஆண்டு விழாவில் நிறுவனர் நாராயண மூர்த்தி உருக்கம்

இன்ஃபோசிஸ் நிறுவனர்களின் வாரிசுகள், நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்படக்கூடாது அல்லது ஈடுபடுத்தப்படக்கூடாது என அன்று கருதியது தவறு என கூறியுள்ளார் நாராயண மூர்த்தி.
நாராயண மூர்த்தி
நாராயண மூர்த்தி ட்விட்டர்

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், கடந்த டிசம்பர் 14 அன்று தன்னுடைய நாற்பதாவது ஆண்டு தின விழாவை விமர்சையாக கொண்டாடியது.

ஆண்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களாக இருந்த என் ஆர் நாராயணமூர்த்தி, நந்தன் எம் நிலக்கேனி, எஸ் கோபாலகிருஷ்ணன், எஸ் டி ஷிபுலால், கே தினேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்

இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நான் எக்ஸிக்யூடிவ் சேர்மேனாக (Non-Executive Chairman) நந்தன் நிலக்கெனி இருக்கிறார்.

“நான் இந்தப் பதிவியிலிருந்து வெளியேறும் போது நிறுவனர் அல்லாத ஒருவரை இப்பதவியில் அமர வைத்துவிட்டு வெளியேறுவேன்” என்று கூறினார்.

இப்பேற்பட்ட நிறுவனத்தின் உயர் பதவியில் சரியான நபரை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்பது தன் மனதில் ஓடிக் கொண்டிருப்பதாகவும் வெளிப்படையாக பேசினார் நந்தன் நிலக்கெனி.

ஆனால், இதுவரை சரியான நபர் தனக்கு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

சரியான தலைமைக் கட்டமைப்பு நிறுவுவது, சரியான மதிப்புகளைக் கொண்ட நபர்கள் இந்த நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது போன்ற நாராயண மூர்த்தியின் தொலைநோக்குப் பார்வை இந்த நிறுவனத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வேன் என்றும் நந்தன் பேசியிருந்தார்.

நாராயண மூர்த்தி
அக்ஷதா மூர்த்தி : 'ராணி எலிசபெத்தை விட அதிக சொத்து' இன்ஃபோசிஸ் மகள் பில்லியரானது எப்படி?

எப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து அவர் வெளியேறுவார் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. நிறுவனத்திற்கு தன் சேவை தேவைப்படும் வரை அவர் பதவி வகிப்பார் எனவும் கூறினார் நந்தன் நிலக்கெனி.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூலம் புகழிலும், பணத்திலும் மிகப்பெரிய உச்சத்தை தொட்ட நிறுவனர்களில் ஒருவரான இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி நந்தனை தொடர்ந்து பேசினார். நாராயணமூர்த்தி வெளிப்படையாகவும், உருக்கமாகவும் தன்னுடைய சில கருத்துக்களை பதிவு செய்தார்.

இன்ஃபோசிஸ் நிறுவனர்களின் வாரிசுகள், நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்படக்கூடாது அல்லது ஈடுபடுத்தப்படக்கூடாது என அன்று கருதியது தவறு என கூறியுள்ளார் நாராயண மூர்த்தி.

நிறுவனர்களின் அடுத்த தலைமுறையை இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வெளியே வைத்தது தவறு என்றும் கூறியுள்ளார்.

”சரியான திறமைசாலிகள் இன்போசிஸ் நிறுவனத்திற்குள் வருவதற்கு தடையாக இருந்திருக்கிறேன் அல்லது அவர்கள் நிறுவனத்தில் இணையாமல் தடுத்திருக்கிறேன்” எனக் கூறியவர், முன்னர் பேசிய கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

ஒரு வேலையை செய்து முடிக்க ஒருவர் சரியான நபர் என்றால், எல்லா தனி மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தன் கருத்தை திருத்திக் கொள்வதாகவும் கூறினார்.

தகுதியற்ற ஒருவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் முக்கியமான நிர்வாக பதவியில் வந்து அமர்ந்து விடுவாரோ என தான் முன்பு அச்சப்பட்டதாகவும் கூறினார் நாராயண மூர்த்தி.

1981ஆம் ஆண்டு வெறும் 10,000 ரூபாயில் தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ் என்கிற ஐடி நிறுவனம் இன்று (2022 நிதி ஆண்டில்) 1.24 லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி வருகிறது.

சலில் பரேக் என்பவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு முன் விஷால் ஷிக்கா என்பவர் முதன்மைச் செயல் அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாராயண மூர்த்தி
இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி : இன்றுவரை விமானத்தில் எகானமி வகுப்பில் பயணிப்பது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com