Jahaz Mahal : Have you been to this palace in Madhya Pradesh that looks like an ornate ship!
Jahaz Mahal : Have you been to this palace in Madhya Pradesh that looks like an ornate ship!Twitter

மிதக்கும் கப்பல் போல் கட்டப்பட்ட பிரம்மாண்ட அரண்மனை - இந்தியாவில் எங்கு இருக்கிறது?

கப்பல் அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த இடம் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை அதிசயங்களின் புதையல் ஆகும். ஜஹாஸ் மஹால் இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.

இந்தியா அதன் பல்வேறு கலாச்சாரத்திற்கு மட்டுமல்ல அதன் பல்வேறு விதமான கட்டிடக்கலைகளுக்கும் புகழ்பெற்றது. அந்த வகையில் அதிகம் அறியப்படாத கட்டிடக்கலை அதிசயமாக விளங்கும் ஜஹாஸ் மஹால் பற்றி தான் இந்த பதிவில் சொல்ல போகிறோம். இது மிதக்கும் கப்பல் போல கட்டப்பட்ட பிரம்மிக்க வைக்கும் கோட்டை ஆகும்.

மத்திய பிரதேசத்தில் உள்ள அழகிய வரலாற்று நகரமான மாண்டுவின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கோட்டை தான் ஜஹாஸ் மஹால். பெரும்பாலும் கப்பல் அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த இடம் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை அதிசயங்களின் புதையல் ஆகும். ஜஹாஸ் மஹால் இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.

வரலாறு

இந்த அற்புதமான அரண்மனை 15 ஆம் நூற்றாண்டில் மால்வா சுல்தானகத்தின் ஆட்சியாளராக இருந்த கியாஸ்-உத்-தின் கில்ஜியால் கட்டப்பட்டது . ஜஹாஸ் மஹால், அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் வசிக்கும் இடமாக உருவாக்கப்பட்டதாகும்.

மிதக்கும் அழகு

ஜஹாஸ் மஹாலின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று. அதன் தனித்துவமான கட்டிடக்கலை இதன் சிறப்பம்சம் ஆகும். இந்த அரண்மனை முஞ்ச் தலாவ் மற்றும் கபூர் தலாவ் ஆகிய இரண்டு செயற்கை ஏரிகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பை பார்க்கும் போது தண்ணீரில் பயணிக்கும் கப்பல் போன்றே தோன்றும். முழு அரண்மனையும் நீரில் மிதப்பது போல் தோன்றும்.

கட்டிடக்கலை அதிசயம்

ஜஹாஸ் மஹாலின் வடிவமைப்பு கடந்த காலத்தின் கைவினை கலைஞர்களின் கலைத் திறனைக் காட்டுகிறது. இந்த அரண்மனை நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் மற்றும் அழகிய நிலப்பரப்பு தோட்டங்களை கொண்டுள்ளது. பல அழகான முற்றங்கள், தூண் மண்டபங்கள் உள்ளன.

Jahaz Mahal : Have you been to this palace in Madhya Pradesh that looks like an ornate ship!
Gujarat: படிக்கிணறு முதல் கண்ணாடி அரண்மனை வரை- 5 கண்கவர் Travel Destinations!

அரண்மனை கட்டப்பட்டத்தின் நோக்கம்

ஜஹாஸ் மஹால் ஒரு நடைமுறை காரணத்திற்காக கட்டப்பட்டது. ஏரிகளுக்கு இடையில் நடப்பதற்கும், சுட்டெரிக்கும் கோடைக் காலங்களில்  இயற்கையான குளிர்ச்சி அமைப்பு வேண்டும் என்பதற்காக நீருக்குள் கட்டப்பட்டதாம். ஏரிகளின் நீர் வெப்பநிலையை பராமரிக்க உதவியது.

ஜஹாஸ் மஹால் இந்தியாவின் கட்டிடக்கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு வாழும் உதாரணமாக இருக்கிறது.

Jahaz Mahal : Have you been to this palace in Madhya Pradesh that looks like an ornate ship!
கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை: Muthunandini Palace பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com