மோடி : "மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம்"- இந்தியா குறித்து என்ன பேசினார் ஜோ பைடன்?

"ஊடகங்களை சந்திக்காதீர்கள், ஊடக சந்திப்பு நடத்த விடமாட்டேன்" எனக் கூறியது எந்த பலனையும் அளிக்கவில்லை.
மோடி : "மனித உரிமைகள், பத்திரிகைன் சுதந்திரம்"- இந்தியா குறித்து என்ன பேசினார் ஜோ பைடன்?
மோடி : "மனித உரிமைகள், பத்திரிகைன் சுதந்திரம்"- இந்தியா குறித்து என்ன பேசினார் ஜோ பைடன்?Twitter

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிறு அன்று வியட்நாமில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பில், பத்திரிக்கை சுதந்திரம் குறித்தும் மனித உரிமைகள் குறித்து வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.

இரண்டு நாட்கள் டெல்லியில் ஜி 20 மாநாட்டில் கலந்துகொண்ட பைடன், "நான் மனித உரிமைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம், சிவில் சமூகத்தின் பங்கு, சுதந்திரமான பத்திரிக்கை, வலிமையான வளமான நாட்டை கட்டி எழுப்புவதுக் குறித்து மோடியுடன் பேசினேன்" எனக் கூறியுள்ளார்.

ஜோ பைனடனின் கருத்துகள் மோடிக்கு எதிராக அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் இதுகுறித்து பிரதரை தாக்கிப் பேசியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "மோடி பைடனிடம் "ஊடகங்களை சந்திக்காதீர்கள், ஊடக சந்திப்பு நடத்த விடமாட்டேன்" எனக் கூறியது எந்த பலனையும் அளிக்கவில்லை.

இந்தியாவில் மோடியிடம் என்ன கூறினாரோ அதன் அப்படியே வியட்நாமில் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர்." என ட்வீட் செய்துள்ளார்.

மேலும் "பைடனின் குழு பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும் பத்திரிகையாளர்கள் அமெரிக்க அதிபரிடமோ நம் பிரதமரிடமோ கேள்விகளைக் கேட்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஜோ பைடன் வியட்நாமில் பேசுகிறார். மோடியின் ஸ்டைலில் இதுதான் ஜனநாயகம்!" எனவும் அவர் எழுதியுள்ளார்.

மோடி : "மனித உரிமைகள், பத்திரிகைன் சுதந்திரம்"- இந்தியா குறித்து என்ன பேசினார் ஜோ பைடன்?
G20: மோடி, ஜோ பைடனுக்கு காட்டிய 'கோனார்க் சக்கரம்' - என்ன சிறப்பு?

வியட்நாமில் மேலும் இந்தியாவுடன் பல முக்கிய காரியங்களை விவாதித்ததாகவும், அமெரிக்கா - இந்தியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறியுள்ளார் பைடன்.

மேலும் ஜி20 மாநாட்டை டெல்லியில் நடத்தியதற்காக மோடிக்கு நன்றியைத் தெரிவித்திருக்கிறார். பாதுகாப்புத்துறையில் இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்படுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மோடி : "மனித உரிமைகள், பத்திரிகைன் சுதந்திரம்"- இந்தியா குறித்து என்ன பேசினார் ஜோ பைடன்?
Narendra Modi: இறுதி கட்டத்தை எட்டும் புதிய நாடாளுமன்றம்; திறந்து வைப்பது யார் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com