"அம்மா எனும் மந்திரமே": 25 வருடம் கழித்து இணைந்த தாய்-மகன்; ஓர் நெகிழ்ச்சி சம்பவம்

கீதா - ராம் பாய் தம்பதிக்கு அவர்களது முதல் குழந்தை, கோவிந்த் பிறந்தவுடன், மூவரும் கேரளாவிற்கே திரும்பியுள்ளனர். ஆனால், கீதா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார்.
கோவிந்த் தாய்
கோவிந்த் தாய்Facebook
Published on

ஒன்றரை வயதில் பிரிந்த மகன் 25 வருடங்கள் கழித்து தனது தாயை சந்தித்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த கீதா என்ற பெண், முப்பது வருடங்களுக்கு முன் வேலை காரணமாக குஜராத்திற்கு சென்றார். அங்கு ராம் பாய் என்பவரை சந்தித்துள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

கீதா - ராம் பாய் தம்பதிக்கு அவர்களது முதல் குழந்தை, கோவிந்த் பிறந்தவுடன், மூவரும் கேரளாவிற்கே திரும்பியுள்ளனர். ஆனால், கீதா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார். ஆனால் ராம் பாய் தன் மனைவியை விட்டுவிட்டு தனது ஒன்றரை வயது மகன் கோவிந்துடன் மீண்டும் குஜராத்திற்கே சென்றுவிட்டார்.

அது மட்டுமல்லாமல், தன்னையோ, தனது மகனையோ தேடி வரவேண்டாம் என கடிதம் மூலம் கீதாவிற்கு தகவல் தெரிவித்திருந்தார் ராம் பாய். மகனையும் கணவனையும் பிரிந்த கீதா அதன் பின்னர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்ற துவங்கினார்.

கோவிந்த் தாய்
இறந்த மகனின் சடலத்தோடு நான்கு நாட்கள் வாழ்ந்த தந்தை - என்ன நடந்தது?

இந்நிலையில், 25 வருடங்களுக்கு பிறகு, தன் தாயை பிரிந்த கோவிந்த் அவரை தேடி கேரளா சென்றுள்ளார். கோவிந்தை அவரது தந்தை வீட்டார் தான் வளர்த்துள்ளனர். அவர்கள் தான் கோவிந்த் தாயைச் சென்று பார்க்கச்சொல்லி அனுப்பிவைத்ததாக அவர் தெரிவித்தார்.

போலீசார் கோவிந்த் அளித்த தகவல்களை வைத்து, ஊர் பஞ்சாயத்து உறுப்பினர் மூலம் கீதாவை தொடர்புகொண்டுள்ளனர். வீடு கட்டுவது தொடர்பாக பேசத்தான் அழைத்தனர் என்று நினைத்த கீதா, தன் மகன் வந்திருப்பதாக அவர்கள் தெரிவிப்பார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இறப்பதற்கு முன் ஒரு முறையேனும் மகனை சந்தித்துவிட வேண்டும் என தினமும் ஏங்கி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட, நடுங்கும் குரலில் பேசிய கீதா," என் கனவுகள் நனவானது. என்ன சொல்லறது என்று எனக்கு தெரியவில்லை." எனவும் தெரிவித்தார்

கோவிந்துக்கு குஜராத்தி மற்றும் இந்தி மட்டுமே தெரியும். பல வருடங்களுக்கு முன்னரே கேரளாவிற்கு வந்துவிட்டதால், கீதாவுக்கு இந்தி அவ்வளவாக நினைவில்லை. கொஞ்சம் இந்தியில் தான் மகனுடன் பேசுகிறார். கோவிந்த் இனி தன் தாயுடனே இருக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஒன்றரை வயதில் பிரிந்த மகனை 25 ஆண்டுகள் கழித்து தாய் சந்தித்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது

குஜராத்திற்கு சென்றுவிட்ட ராம் பாய் மற்றொரு திருமணம் செய்துகொண்டதாகவும் கோவிந்த் தெரிவித்தார்

கோவிந்த் தாய்
தாயை கொன்ற பிட்புல் நாயை மீண்டும் வாங்கிக்கொண்ட உரிமையாளர் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com