இந்தியாவின் முதல் ‘இலக்கிய நகரமாகும்’ கோழிக்கோடு - இங்கு என்ன பார்க்கலாம்?

இந்தியாவின் முதல் இலக்கிய நகரமாக கோழிக்கோடு பெயரிடப்பட்டிருக்கிறது. யுனெஸ்கோவினால் பல்வேறு வகைகளில் அங்கீகரிக்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள 55 நகரங்களிலிருந்து கோழிக்கோடு பெயரிடப்பட்டிருக்கிறது.
Kozhikode in Kerala becomes India’s first UNESCO City of Literature
Kozhikode in Kerala becomes India’s first UNESCO City of LiteratureCanva
Published on

கேரளாவில் உள்ள ஒரு பிரமிக்க வைக்கும் நகரமாக இருக்கிறது இந்த கோழிக்கோடு. கோழிக்கோடு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடுகிறது. இந்த நகரம் இந்தியாவின் முதல் இலக்கிய நகரமாக மாறி வரலாறு படைத்துள்ளது. கோயில் கோட்டை என்பதே கோழிக்கோடு என மருவியதாகக் கூறப்படுகிறது. முற்காலத்தில் சுள்ளிக்காடு எனவும், கள்ளிக்கோட்டை எனவும் அழைக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலேயர்களாலும் சீனர்களாலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பெற்றாலும், மலையாளிகள் இதை கோழிக்கோடு என்றே அழைக்கின்றனர். வரலாற்று கோட்டைகள், அமைதியான கடற்கரைகள் இருக்கும் கேரளாவின் கோழிக்கோடு பசுமைகள் கொண்ட அழகான இயற்கை புகலிடமாக விளங்குகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் முதல் இலக்கிய நகரமாக கோழிக்கோடு பெயரிடப்பட்டிருக்கிறது. யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்கால் (UCCN) கோழிக்கோடு ‘இலக்கிய நகரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. யுனெஸ்கோவினால் பல்வேறு வகைகளில் அங்கீகரிக்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள 55 நகரங்களிலிருந்து கோழிக்கோடு பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் கோழிக்கோடு எழுத்தாளர்கள், இலக்கியம் மற்றும் கலாச்சார செயல்பாடுகளின் ஈடுபாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கோழிக்கோடு தவிர மற்ற 54 நகரங்கள் ‘கிரியேட்டிவ் நகரங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் 'இசையின் நகரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட 'கிரியேட்டிவ் நகரங்கள்' 2024 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 5, 2024 வரை போர்ச்சுகலின் பிராகாவில் நடைபெற உள்ள UCCN வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன.

கோழிக்கோட்டில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்

  • கோழிப்பாரா அருவி

  • துஷாரகிரி அருவி

  • பேப்பூர்

  • லயன்ஸ் பார்க்

  • இனிமையான தெரு

  • மனஞ்சிரா சதுக்கம்

  • வெள்ளரி மாலை

  • பெருவண்ணாமுழி அணை

  • மாத்ரி டீ கதீட்ரல்

  • கப்பாட் கடற்கரை

  • மிஷ்கல் பால் மசூதி

Kozhikode in Kerala becomes India’s first UNESCO City of Literature
கேரளா: அல்லி மலர்களால் உயிர்ப்பிக்கப்படும் கிராமம் - மலரிக்கலில் என்ன அதிசயம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com