மேகாலயா: பழங்குடி மொழியில் ரோமானிய எழுத்துகள்- கலாச்சாரத்தை காப்பாற்றிக்கொண்ட மக்களின் கதை

மக்களின் கலாச்சாரக் கூறுகள் ஒரு தலைமுறையில் இருந்து மற்றொன்றுக்கு வாய்வழியாக கடத்தப்பட்டு வந்தது. அவர்களது பண்பாடு நாட்கள் செல்ல செல்ல மறைந்துவிடலாம் என்ற அச்சம் ஒரு கிறிஸ்தவரை தொற்றிக்கொண்டது.
மேகாலயா: பழங்குடி மொழியில் ரோமானிய எழுத்துகள்- கலாச்சாரத்தை காப்பாற்றிக்கொண்ட மக்களின் கதை
மேகாலயா: பழங்குடி மொழியில் ரோமானிய எழுத்துகள்- கலாச்சாரத்தை காப்பாற்றிக்கொண்ட மக்களின் கதைTwitter

மேகாலயாவில் உள்ள ஒரு பழங்குடியின மொழி ரோமானிய எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தி எழுதப்படுகிறது. “மேகாலாயா மொழிக்கு ரோமானியா எழுத்தா?” என வியக்கிறீர்களா?

காலவெள்ளத்தைக் கடந்து நிற்கும் காசி மொழியின் கதைதான் இது. காசி பழங்குடி மக்கள் பற்றி நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம். அவர்களின் மொழிக்கு எழுத்துருவம் இல்லாமல் இருந்தது.

வேல்ஸைச் சேர்ந்த கிறிஸ்தவ மிசினரி மேகாலயாவில் இயங்கியிருக்கின்றனர். அதில் பணியாற்றிய ஜோன்ஸ் என்ற பாதிரியார் காசி பழங்குடியினர் பற்றி அறிந்துள்ளார். 

அவர்களது கலாச்சாரக் கூறுகள் ஒரு தலைமுறையில் இருந்து மற்றொன்றுக்கு வாய்வழியாக கடத்தப்படுவதை கவனித்துள்ளார். அவர்களது கலாச்சாரம் நாட்கள் செல்ல செல்ல மறைந்துவிடலாம் என அஞ்சிய ஜோன்ஸ், அவர்களது பண்பாடுகளைக் காக்க ஒரு பணியை மேற்கொண்டார்.

காசி பழங்குடி மக்களின் அறிவும், பாடல்களும் அடுத்ததடுத்த தலைமுறைகளுக்கு சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும் என வலுவாக எண்ணினார் ஜோன்ஸ். இதற்காக உறுதியான அமைப்புத் தேவைப்பட்டது.

ஜோன்ஸ் காசி எழுத்துக்களை ரோமானிய எழுத்து வடிவங்களில் உருவாக்கினார். இதன் மூலம் காசி பழங்குடி மக்கள் தங்களது கதைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளை அதுவரை இல்லாத வகையில் எழுத்து வடிவத்தில் பதிவு செய்தனர். 

மேகாலயா: பழங்குடி மொழியில் ரோமானிய எழுத்துகள்- கலாச்சாரத்தை காப்பாற்றிக்கொண்ட மக்களின் கதை
Longwa: இந்திய-மியான்மர் எல்லையில் இரட்டை குடியுரிமை கொண்ட பழங்குடி கிராமம்!பின்னணி என்ன?

இப்படியாக காசி மொழி பரிணாமவளர்ச்சி அடையத் தொடங்கியது. அடுத்த கட்டமாக கல்வியிலும் காசி மொழிக்கு இடம் கிடைத்தது. ஜோன்ஸ் உருவாக்கிய பள்ளிகளில் காசி மொழி கற்பிக்கப்பட்டது. 

1889ம் ஆண்டு காசி மொழியில் ரோமானிய எழுத்து வடிவங்களைத் தாங்கி முதல் செய்திதாள் வெளியானது. 

காசி மட்டுமல்லாமல் மிசோரமில் பேசப்படும் மற்றொரு இந்திய மொழியான மிசோவும் ரோமானிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது. மிசோ மொழியானது இப்போது பெரும்பாலான பள்ளி கல்லூரிகளில் கற்றுத் தரப்படும் வளர்ச்சியடைந்த இந்திய பழங்குடி மொழியாகும்.

மேகாலயா: பழங்குடி மொழியில் ரோமானிய எழுத்துகள்- கலாச்சாரத்தை காப்பாற்றிக்கொண்ட மக்களின் கதை
மேகாலயா முதல் கேரளா வரை : இந்தியாவின் கலாச்சார திருவிழாக்களை எங்கு, எப்போது காணலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com