கேரளா: குழந்தையின் தங்க செயின், வளையலை திருடிய காகம் - என்ன நடந்தது?

உடனடியாக உறவினர் வீட்டிற்குச் சென்று அந்த தங்க நகைகளை தேடி உள்ளார். அதன் பின்னர் வீட்டின் பின்புறத்தில் உள்ள தென்னை மரத்தடியில் குப்பை நடுவே தங்க செயின் மட்டும் கிடைத்துள்ளது.
கேரளா: குழந்தையின் தங்க செயின், வளையலை திருடிய காகம் - என்ன நடந்தது?
கேரளா: குழந்தையின் தங்க செயின், வளையலை திருடிய காகம் - என்ன நடந்தது?Twitter

கேரள மாநிலம் கோழிக்கோடு கண்ணன்கடவு பகுதியைச் சேர்ந்த நசீர் - ஷரீபா தம்பதிக்கு ஹைபா என்ற மகள் உள்ளார்.

சமீபத்தில் உறவினர் வீட்டில் நடந்த திருமணத்திற்கு ஷரீபா தனது மகளுக்கு தங்க நகைகளை அணிவித்துள்ளார்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் அச்சிறுமி தனது தங்க நகைகளை ஒரு பேப்பரில் சுற்றி கூடைப்பையில் வைத்துள்ளார். அதனை அம்மாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஷரீபா அதனை மறந்து விட்டார்.

பத்து நாட்கள் கழித்து தங்க நகைகளை தேட முயன்ற போது கூடையில் வைத்திருந்த நகையை காணவில்லை என தேடி இருக்கிறார்.

உடனடியாக உறவினர் வீட்டிற்குச் சென்று அந்த தங்க நகைகளை தேடி உள்ளார். அதன் பின்னர் வீட்டின் பின்புறத்தில் உள்ள தென்னை மரத்தடியில் குப்பை நடுவே தங்க செயின் மட்டும் கிடைத்துள்ளது.

தென்னை மரத்தில் கூடு கட்டியுள்ள காகம் இதுபோன்று பொருட்களை எடுத்து வந்து கூட்டில் சேர்ப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் கூறியிருக்கிறார். இதனை அடுத்து அந்த கூட்டில் தேடிய போது மற்ற தங்க நகைகள் கிடைத்துள்ளன.

கேரளா: குழந்தையின் தங்க செயின், வளையலை திருடிய காகம் - என்ன நடந்தது?
கேரளா: அல்லி மலர்களால் உயிர்ப்பிக்கப்படும் கிராமம் - மலரிக்கலில் என்ன அதிசயம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com