நாசிக்: இந்தியாவின் வைன் தலைநகரம் - மது கிறக்கம் தொடங்கியது எப்படி?

நாசிக் இந்தியாவின் வைன் தலைநகரம் எனக் கூறப்படுகிறது. சோமரசம் எனப்படும் பானத்தின் ஒரு துளி இங்கு விழுந்ததாக புராணங்கள் கூகின்றன. இப்போது இந்தியாவின் வைன் தயாரிப்பு மையமாக நாசிக் திகழ்கிறது.
நாசிக்: இந்தியாவின் வைன் தலைநகரம் - மது கிறக்கம் தொடங்கியது எப்படி?
நாசிக்: இந்தியாவின் வைன் தலைநகரம் - மது கிறக்கம் தொடங்கியது எப்படி?Twitter
Published on

இந்தியா சுற்றுலாப்பயணிகள் சில தசாப்தங்களுக்கு முன்னர் சுவையான வைனுக்காக கலிஃபோர்னியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணித்தனர்.

ஆனால் இப்போது உள்ளூர் விவசாயப் பொருட்களை வைத்தே சிறப்பான வைனை தயாரிக்கப்படுகிறது. இதற்கு சிறந்த உதாரணம் மகாராஷ்டிரா மாநிலத்தி uள்ள நாசிக்.

நாசிக் இந்தியாவின் வைன் தலைநகரம் எனக் கூறப்படுகிறது. சோமரசம் எனப்படும் பானத்தின் ஒரு துளி இங்கு விழுந்ததாக புராணங்கள் கூகின்றன. இப்போது இந்தியாவின் வைன் தயாரிப்பு மையமாக நாசிக் திகழ்கிறது.

நாசிக் பழைமையான புராணங்களை தாங்கியிருக்கக் கூடிய நகரமாக இருந்தாலும் வைன் தயாரிப்பு புதிய முன்னெடுப்புதான்.

1990களில் சமத் என்ற நபர் கலிஃபோர்னியாவில் இருந்து தனது பூர்வீக ஊரான நாசிக்குக்கு திரும்பினார்.

தனது ஊரின் நில வளம், பெருகிவரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் நடுத்தர மக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு திட்டத்தைத் தீட்டினார்.

நாசிக் ஏற்கெனவே அதன் திராட்சைகளுக்காக புகழ்பெற்றிருந்தது குறிப்படத்தக்கது.

1999ம் ஆண்டு அவரது திராட்சைத் தோட்டத்தின் இந்தியாவின் முதல் வைன் தொழிற்சாலையை திறந்தார்.

நாசிக்: இந்தியாவின் வைன் தலைநகரம் - மது கிறக்கம் தொடங்கியது எப்படி?
பாண்டிச்சேரி இல்லை; இந்தியாவிலேயே குறைந்த விலையில் மது விற்பனையாகும் இடம் எது தெரியுமா?

நாசிக் மட்டுமல்லாமல் காஷ்மீர், ஹைத்ராபாத் சுற்றுவட்டாரங்களிலும் 300,400 ஆண்டுகளாக வைன் உற்பத்தி இருந்துவருகிறது.

19ம் நூற்றாண்டில் பேரழிவை ஏற்படுத்தியன் பைலோக்செரா பூச்சி வெடிப்பு, பிரிடிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்ட பீர் கலாச்சாரம், இந்திய அரசுஅறிமுகப்படுத்திய மதுவிலக்கு சட்டங்கள், ஆகியவை வைன் விநியோகத்தை மட்டுப்படுத்தியிருந்தன.

இப்போது நாசிக்கில் சர்வதேச தரத்தில் வைன் கிடைக்கிறது. வட இந்தியாவில் நாசிக் போல தென்னிந்தியாவில் கூர்க் நகரின் வீடுகளில் தயாரிக்கப்படும் வைன் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.

நாசிக்: இந்தியாவின் வைன் தலைநகரம் - மது கிறக்கம் தொடங்கியது எப்படி?
கேரளா : ஒரு கிராமத்தை காப்பாற்றிய 'செஸ் விளையாட்டு' - ஓர் ஆச்சரியக் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com