ராமர் கோவில் திறப்பு: மும்பையில் வெடித்த வன்முறை; 13 பேர் கைது; 'புல்டோசர்' நடவடிக்கை!

இஸ்லாமிய குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக கோஷம் எழுப்பியுள்ளனர். மேலும் சில இஸ்லாமியர்களை கோஷம் எழுப்ப வற்புறுத்தியிருக்கின்றனர்.
ராமர் கோவில் திறப்பு: மும்பையில் வெடித்த வன்முறை; 13 பேர் கைது; 'புல்டோசர்' நடவடிக்கை!
ராமர் கோவில் திறப்பு: மும்பையில் வெடித்த வன்முறை; 13 பேர் கைது; 'புல்டோசர்' நடவடிக்கை!Twitter

ராமர் கோவில் திறப்புக்கு பிறகு, மும்பையில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது.

பிராண பிரதிஷ்டா பூஜைக்கு முந்தைய நாளும் அடுத்தநாளும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

செவ்வாய் அன்று ஊர்வலம் நடத்திய ராம பக்தர்கள் வாகனங்களை நொருக்கும், கடைகளை உடைக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

இஸ்லாமிய குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக கோஷம் எழுப்பியுள்ளனர். மேலும் சில இஸ்லாமியர்களை கோஷம் எழுப்ப வற்புறுத்தியிருக்கின்றனர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கலவரம் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்தவர்கள் என 13 பேரை கைது செய்துள்ளனர்.

வன்முறைத் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் விதமாக, மீரா ரோடு நயா நகர் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான 15 கடைகள் இன்று காலை புல்டோசர் மூலம் அகற்றப்பட்டன.

கலவரம் தொடர்பாக இணையத்தில் மீம்கள், வீடியோக்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ராமர் கோவில் திறப்பு: மும்பையில் வெடித்த வன்முறை; 13 பேர் கைது; 'புல்டோசர்' நடவடிக்கை!
"ராமர் கோவில் பிரதிஷ்டை அரசியல் நிகழ்வு அல்ல" - ரஜினிகாந்த் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com