தன்னந்தனியாக கப்பல் வீடு கட்டும் விவசாயி - 13 ஆண்டு கால உழைப்பு எப்போது நிறைவடையும்?

நிறைய கஷ்டங்கள் இருந்தன. கட்டிடக்கலையில் முறையான புரிதலும், முக்கியமாக பொறுமையும் அவசியம். இதை தவிர இருந்த பெரும் பிரச்னை, பணம். இவரிடம் பணியாற்றிய மேஸ்திரிகளுக்கு இவரால் கூலி வழங்க முடியவில்லை
தன்னந்தனியாக கப்பல் வீடு கட்டும் விவசாயி - 13 ஆண்டு கால உழைப்பு எப்போது நிறைவடையும்?
தன்னந்தனியாக கப்பல் வீடு கட்டும் விவசாயி - 13 ஆண்டு கால உழைப்பு எப்போது நிறைவடையும்?Twitter

2010ல் இருந்து, கிட்ட தட்ட 13 ஆண்டுகளாக தனது கனவு வீட்டை கட்டி வருகிறார் கொல்கத்தாவை சேர்ந்த விவசாயி ஒருவர்.

கப்பல் வடிவில் இவர் கட்டிவரும் இந்த வீடு 2024ஆம் ஆண்டு முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவின் ஹெலென்ச்சா மாவட்டம் நார்த் 24 பர்கானாஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் மின்ட்டு ராய். இவர் ஒரு விவசாயி. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தாவுக்கு வந்தவர் அவரது தந்தையுடன் வசித்து வருகிறார்.

தன் வீட்டை கப்பல் வடிவில் அமைக்கவேண்டும் என்று நீண்ட நாள் கனவை கொண்டிருந்தார் மின்ட்டு.

வீடு கட்ட முடிவெடுத்தவர் தனது ஆசையை எஞ்சினியர்களிடம் சொன்ன போது அனைவருமே இது இயலாத காரியம் என பின்வாங்கிவிட்டனர்.

இதனால் தனது கனவு வீட்டை தானே வடிவமைக்க முடிவெடுத்தார். உதவிக்கு சில ஆட்களையும் சேர்த்துக்கொண்டார்.

இவர் கடந்த 2010ஆம் ஆண்டு இவரது சொந்த வீட்டை கட்ட தொடங்கினார். கச்சிதமாக கப்பல் வடிவில் வீட்டை வடிவமைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை.

நிறைய கடினங்கள் இருந்தன. கட்டிடக்கலையில் முறையான புரிதலும், முக்கியமாக பொறுமையும் அவசியம். இதை தவிர இருந்த பெரும் பிரச்னை, பணம். இவரிடம் பணியாற்றிய மேஸ்திரிகளுக்கு இவரால் கூலி வழங்க முடியவிலை.

இதனையடுத்து முன்று ஆண்டுகள் நேபாளம் சென்று, அங்கு வேலைப்பார்த்து கட்டிடக்கலை பயின்றார் மின்ட்டு.

தன்னந்தனியாக கப்பல் வீடு கட்டும் விவசாயி - 13 ஆண்டு கால உழைப்பு எப்போது நிறைவடையும்?
ஒரே வீடு, இரு வேறு மாநிலங்களுக்கு சொந்தம்: எப்படி சாத்தியம்? ஆச்சரியமூட்டும் தகவல்

விவசாயியான மின்ட்டு தனக்கு கிடைத்த வருமானத்தை வைத்து தான் வீட்டை கட்டி வருகிறார். இதனால் பல சமயங்களில் கட்டுமானத்தை தொடர முடியாமல் இடையூறுகள் ஏற்பட்டிருக்கின்றன். நீண்ட இடைவெளிக்கு கட்டுமானம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

தனது நிலத்தில் விளைந்த பயிர்களை சந்தையில் விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து தான் சிறுகச் சிறுக வீட்டை கட்டி வருகிறார்.

இவர் நியூஸ் 18 தளத்திற்கு அளித்த பேட்டியில், இதுவரை இந்த வீட்டிற்கு 15 லட்சம் ரூபாய் செல்வாகியுள்ளது என தெரிவித்தார்.

சுமார் 39 அடி நீளம், 13 அடி அகலம், 30 அடி உயரம் இருக்கிறது இந்த கப்பல் வீடு. ”அடுத்த ஆண்டு இந்த கப்பல் வீட்டை கட்டி முடிக்கவேண்டும் என்றிருக்கிறேன். வீட்டின் மேல் தளத்தில் எனது வருமானத்திற்காக ஒரு ரெஸ்டாரண்ட்டையும் தொடங்கவுள்ளேன்” என்றவர் வீட்டிற்கு மறைந்த தனது தாயின் பெயரை சூட்டவுள்ளார்.

கட்டி முடிக்கும் முன்னரே அந்த ஏரியாவில் பிரபலமடைந்துவிட்டது மின்ட்டு ராயின் வீடு.

தன்னந்தனியாக கப்பல் வீடு கட்டும் விவசாயி - 13 ஆண்டு கால உழைப்பு எப்போது நிறைவடையும்?
'உலகின் தனிமையான வீடு' இதுதான்! - ஏன் கட்டப்பட்டது? பின்னணியில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com