ஒரே நாடு, ஒரேமொழி - பாசிச போக்கை திணிக்க முயற்சி - அமித் ஷாவுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

" வெவ்வேறு மாநிலத்தவர்கள் தங்களுக்குள் பேசும்போது, பயன்படுத்தும் மொழி இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும்” என்று பேசியிருந்தார் அமித்ஷா.
அமித்ஷா
அமித்ஷா Twitter
Published on

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்து மீண்டும் மொழி பிரச்னையைத் தூண்டிவிட்டிருக்கிறது.

அதில், அமைச்சரின் கருத்துக்கு நாடுமுழுவதுமிருந்து எதிர்ப்புகள் வந்திருக்கின்றன. “அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியைப் பயன்படுத்தப் பிரதமர் முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் அம்மொழியின் முக்கியத்துவம் கூடும். அமைச்சரவையின் செயல்பாடுகள் 70% இந்தி மொழியிலேயே இருக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான மொழியாக இந்தியைப் பயன்படுத்துவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. வெவ்வேறு மாநிலத்தவர்கள் தங்களுக்குள் பேசும்போது, பயன்படுத்தும் மொழி இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும்” என்று பேசியிருந்தார் அமித்ஷா.

அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “அரியணையில் யார் உட்காருவது... ஆங்கிலமா, இந்தியா? என்றால், எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே. இந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே மத்திய அரசின் தந்திரம் என்றார். இந்த தந்திரங்களைத் தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள்” எனவும் ட்விட் செய்திருந்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “பாஜக-வின் இந்தி திணிப்பிற்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை உருவாகும் என்றார்.

அமித்ஷா ஆற்றிய உரை இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமானதாகும் என்றும் இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கிற செயலாக உள்ளது” எனவும் கூறியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன்,

“இந்திய அலுவல் மொழிகள் 22. இந்தி அவற்றுள் ஒன்று. இந்தியைப் பேசுவோரின் எண்ணிக்கையை விட பிறமொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.

ஆனால், பிறமொழிகளைப் பேசுவோரின் உரிமைகளுடன் நாட்டின் பன்மைத்துவத்தையும் சிதைக்கிற முயற்சியில் குறியாகவுள்ளனர். எனவேதான் அமித்ஷா இப்படி பேசிகிறார் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும் அமித்ஷாவின் இந்தக் கருத்துப் புதியதல்ல. ஒரே நாடு- ஒரேமொழி எனும் பாசிச போக்கை வலுவாகத் திணிப்பதற்குரிய ஆபத்தான முயற்சி.ஆங்கிலம் அந்நிய மொழி என்னும் வாதங்களை முன்வைத்து அப்பாவி மக்களை ஏய்க்கும் நோக்கில் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் மக்கள் விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிருக்கிறோம்.” என திருமாவளவன் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.


திமுக எம்.பி கனிமொழி,

“இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தற்போது எதிர்க்கட்சி தலைவரான சித்த ராமையா பதிவிட்டிருக்கும் ட்விட்டில் “இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல. இந்தியைத் தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அரசியல் லாபத்துக்காகத் தனது தாய் மொழியான குஜராத்தியைப் புறக்கணித்து இந்தியை ஆதரித்து சொந்த மாநிலத்துக்கு அமித்ஷா துரோகம் செய்கிறார்.

காந்தி பிறந்த மாநிலத்தைச் சேர்ந்த அமித்ஷா பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இந்தியைப் பயன்படுத்தி உதவி செய்த ”சாவர்க்கர்” போல் நடந்து கொள்கிறார். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெற்றது இல்லை. இந்தியைத் திணிப்பதன் மூலம் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்க பாஜக முயன்றால் கடும் எதிர்விளைவுகள் ஏற்படும்'' எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதே வேளையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ழகரம் ஏந்திய தமிழணங்கு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். சரியான தருணத்தில் அவர் வெளியிட்டுள்ளதாக பலரும் அவரைப் பாராட்டினர். அந்த புகைப்படத்தில், “‘தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!’ என்ற பாரதிதாசன் வரிகள் இடம்பெற்றிருந்தது.

அமித்ஷா
ஏ. ஆர். ரஹ்மான் பகிர்ந்த ‘தமிழணங்கு’ ஓவியம் யார் வரைந்தது தெரியுமா?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com