பாகிஸ்தானிடம் 12 கிராமங்களை வழங்கிய இந்தியா - ஏன் தெரியுமா?

12 கிராமங்களுக்கு மாற்றாக இந்தியா ஒரே ஒரு கிராமத்தை பாகிஸ்தானிடம் இருந்து வாங்கியது. அப்படி அந்த கிராமத்தின் முக்கியத்துவம் என்ன? அந்த கிராமத்துக்கு என்ன ஆனது என்பதை விரிவாகப்பார்க்கலாம்.
பாகிஸ்தானிடம் 12 கிராமங்களை வழங்கிய இந்தியா - ஏன் தெரியுமா?
பாகிஸ்தானிடம் 12 கிராமங்களை வழங்கிய இந்தியா - ஏன் தெரியுமா?Twitter
Published on

இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் முற்றிலும் எதிரி நாடுகளாக இருந்து வருவதை வரலாறு முழுவதும் பார்க்க முடிகிறது. சுதந்திரம் பெற்றது முதலே இரு நாட்டுக்கும் இடையில் கடுமையான எல்லை பிரச்னைகள் நிலவுகிறது.

காஷ்மீரின் ஒரு இன்ச்சை கூட பாகிஸ்தானுக்கு கொடுக்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது இந்தியா. இத்தனை உறுதியான நாடாக இருந்தும் இந்தியா 1962ம் ஆண்டு 12 கிராமங்களைப் பாகிஸ்தானுக்கு வழங்கியது ஏன் தெரியுமா?

இந்த 12 கிராமங்களுக்கு மாற்றாக இந்தியா ஒரே ஒரு கிராமத்தை பாகிஸ்தானிடம் இருந்து வாங்கியது. அப்படி அந்த கிராமத்தின் முக்கியத்துவம் என்ன? அந்த கிராமத்துக்கு என்ன ஆனது என்பதை விரிவாகப்பார்க்கலாம்.

அந்த கிராமத்தின் பெயர் ஹுசைனிவாலா. ஃப்ரோசென்பூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஷஹீத்-இ-ஆசம் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களின் கல்லறைகள் அந்த கிராமத்தில் உள்ளது.

இதேப்போல பகத் சிங்கின் தாயாரான வித்யவாதி தேவியின் கல்லறையும் இங்கு தான் உள்ளது. இவர் பஞ்சாப் மாதா என்ற அடைமொழியைக் கொண்டிருக்கிறார்.

இது இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தியாகிகளின் நினைவுகளை அந்த ஊர் சுமந்து வருவதால் இந்திய அரசு இந்த கிராமத்தை மிகவும் முக்கியமானதாகக் கருதியது.

பாகிஸ்தானிடம் 12 கிராமங்களை வழங்கிய இந்தியா - ஏன் தெரியுமா?
பகத் சிங் : "மரணம் மட்டுமே என் மணமகள்" மாவீரன் பற்றிய 10 தகவல்கள்

பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள் முதல் நாடுமுழுவதும் தியாகிகள் தினமாக கொண்டாடப்பட்டது.

மூவரின் உடல்களும் இப்போது பாகிஸ்தானில் இருக்கும் ஹுசைனிவாலாவில் புதைக்கப்பட்டது. இந்திய மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த கிராமத்தை வாங்க முடிவு செய்து 12 கிராமங்களை வழங்கியது.

1971ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்ற போது பாகிஸ்தான் இராணுவம் இந்த நகையைக் கைப்பற்றியது. இன்றுவரை இந்த தியாகிகளின் கிராமம் பாகிஸ்தானில் தான் உள்ளது.

பாகிஸ்தானிடம் 12 கிராமங்களை வழங்கிய இந்தியா - ஏன் தெரியுமா?
பாகிஸ்தான்: ஒரு உச்சி மாநாடும், அடுத்தடுத்து தலைவர்களின் மரணங்களும் - உலகை உலுக்கிய கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com