உ.பி : முகப்பரு காரணமாக தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்

பல சிகிச்சைகள் செய்தும் முகப்பருக்கள் குணமடையாததால் இளம்பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினர்.
Suicide
SuicideTwitter
Published on

இன்றைய இளைய தலைமுறையினர் பல்வேறு இடங்களில் சாதித்துக்கொண்டிருந்தாலும், சிலர் தங்களின் தாழ்வு மனப்பான்மையால் அவர்களே அவர்களின் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் முகத்தில் பரு வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் முகத்தில் பரு இருந்தால் அழகு, ஆனால் அதுவே அதிகமாக இருக்கும் பட்சத்தில் எதிரியாக கருதுகிறார்கள் சிலர். நிறைய இடங்களிலிருந்து அப்பெண்ணைப் பெண் பார்க்க வந்துள்ளனர், எனினும், திருமணம் கைகூடவில்லை. அதற்குக் காரணம், தனக்கு முகத்தில் உள்ள பருக்கள் என இளம்பெண் நினைத்தார்.

Suicide
SuicideTwitter

அதற்கு ஏற்றாற்போல, இளம்பெண்ணை பார்க்க வந்தவர்களும், பருக்கள் இருப்பதாக நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இளம்பெண்ணின் தாயும் சகோதரியும் கால்நடைகளுக்கு உணவளித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது இளம்பெண் தனது அறையில் தூக்கில் தொங்கியுள்ளார்.

இது குறித்து குடும்பத்தினர்கள் கூறுகையில்,

பல சிகிச்சைகள் செய்தும் முகப்பருக்கள் குணமடையாததால் இளம்பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினர். இளம்பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதையடுத்து வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Suicide
Uttar Pradesh CM : சாமியாரா? மகாராஜாவா? யார் இந்த யோகி ஆதித்யநாத்? - விரிவான பார்வை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com