திருமணம்
திருமணம்Twitter

ஐந்தாவது திருமணம் செய்ய முயன்ற அப்பா; மணப்பெண்ணை காப்பாற்றிய குழந்தைகள்- அதிர்ச்சி சம்பவம்

உத்திர பிரதேசத்தில் கோட்வாலி என்ற இடத்தில் தந்தைக்கு நடக்கவிருந்த திருமணத்தை அவரது குழந்தைகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
Published on

உத்திர பிரதேசம் கோட்வாலி என்ற இடத்தில், ஐந்தாவதாக திருமணம் செய்ய இருந்த தங்களது தந்தையை அவரது 7 குழந்தைகள் மற்றும் நான்கு மனைவிகள் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். ஷஃபி அகமது என்ற 55 வயது நபர் ஒருவர், ஏற்கனவே நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர்.

இவருக்கு மொத்தம் 7 குழந்தைகள். ஆனால் இதனை மறைத்து, ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்துள்ளார் ஷஃபி. தகவல் அறிந்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்த ஷஃபியின் குடும்பத்தினர், மணப்பெண் வீட்டாரிடம் உண்மையை கூறியுள்ளனர்.

marriage
marriageTwitter

அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். மேலும் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் விஷயம் அறிந்ததும், ஷஃபியை தாக்கியுள்ளனர்.

ஷஃபியின் குழந்தைகள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மணப்பெண்ணோ இந்த கலவரத்துக்கு இடையில், மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

திருமணம் நடைபெறவிருந்த இடத்திற்கு விரைந்த கோட்வாலி போலீசார், ஷஃபியை கைது செய்துள்ளனர். மேலும், ஷஃபி தங்கள் குடும்பத்திற்கு மாதாமாதம் பணம் தருவதை நிறுத்தியதாகவும், விசாரித்தபோது ஐந்தாவது திருமணத்திற்கு தயாராகி வந்ததும் தெரிய வந்துள்ளது.

திருமணம்
திருமணம் ஆன 45 நாட்களில் தங்க நகைகளுடன் முன்னாள் காதலனுடன் சென்ற பெண் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com