7 வயது சிறுத்தைப்புலியை எரித்துக் கொன்ற கிராமவாசிகள் - 150 பேர் மீது வழக்குப்பதிவு

சில நாட்களுக்கு முன் சுஷ்மா தேவி எனும் 47 வயது பெண் சிறுத்தைப்புலியால் அடித்துக்கொல்லப்பட்டதால் கிராமத்தினர் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சிறுத்தைப்புலி
சிறுத்தைப்புலிPixabay
Published on

உத்தரகாண்ட் மாநிலம், பவுரி கர்வால் மாவட்டத்தில் 7 வயது சிறுத்தைப்புலியை உயிருடன் எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

சாப்லோதி கிராமத்தில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சிறுத்தைப்புலியைக் கொன்றதற்காக கிராமத்தைச் சேர்ந்த 150 பேர் மீது வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் சுஷ்மா தேவி எனும் 47 வயது பெண் சிறுத்தைப்புலியால் அடித்துக்கொல்லப்பட்டதால் கிராமத்தினர் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண்ணை தாக்கியது இதே சிறுத்தைப்புலி தானா என்பது கேள்விக்குறியே.

என்ன நடந்தது?

சிறுத்தைப் புலி கிராமத்தில் ஒருவரைக் கொன்று விட்டதால் அவற்றைப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இரண்டு கூண்டுகள் அமைத்துக் காத்திருந்த வனத்துறையினருக்குக் கடந்த செவ்வாய்க் கிழமை காலை 5 மணி அளவில் ஒரு கூண்டில் சிறுத்தைப்புலி பிடிபட்டுள்ளதாகத் தகவல் வந்திருக்கிறது.

சிறுத்தைப்புலி
அட்வென்சர் ஹனிமூன் செல்ல வேண்டுமா? இந்த காடுகளை ட்ரை பண்ணுங்க | Travel

சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் செல்லும் போது அங்குக் கிராமவாசிகள் கடும் கோபத்துடன் இருந்திருக்கின்றனர். அவர்கள் சிறுத்தையை எரிக்க பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களைத் தயாராக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

வனத்துறையினரின் பேச்சைக் கேட்காத கிராம வாசிகள் அவர்களை மீறி சிறுத்தையின் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியிருக்கின்றனர். சிறுத்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய வனத்துறையினர். கிராம வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டில் வாழும் மிருகங்கள் இறை தேடியோ, தண்ணீர் தேடியோ அல்லது இதர காரணங்களுக்காகக் கிராமத்தில் புகுந்துவிடுகின்றன. சில நேரங்களில் இவற்றால் மனிதர்கள் தாக்கப்படுகின்றனர். வனத்துறையினர் ஆட்கொல்லி மிருகங்களை வேட்டைக்காரர்கள் மூலம் கொல்லும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. ஆனால் கிராம மக்களே உயிருடன் ஒரு விலங்கை எரித்துக்கொல்வது இது இரண்டாம் முறை.

சிறுத்தைப்புலி
அம்பேத்கரின் பெயர் வைத்ததால் கலவரம் - அமைச்சர் வீட்டில் தீ வைத்ததால் பரபரப்பு

கடந்த 2011ம் ஆண்டு தாம்தர் எனும் கிராமத்தில் இதே போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com