"சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை மாஸ்டர் பிளான் என்கிறீர்கள்!" - சீறிய மஹுவா மொய்த்ரா

நாடாளுமன்றத்தில் சிங்கம் போல கர்ஜித்தார் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா.

நாடாளுமன்றத்தில் சிங்கம் போல கர்ஜித்தார் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா.

"கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள். நான் இன்று மாலை அவையில் பேசுகிறேன்" என்று முன்னதாக பாஜகவினருக்கு ட்விட்டர் வாயிலாக சவால் விடுத்திருந்தார் மஹூவா.

அவர் பகிர்ந்திருந்த ட்வீட்டில், "இன்று மாலை நான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் போது பேசுகிறேன். பாஜகவினரே, கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என கூறி இருந்தார்.

இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், மத்திய அரசுக்கு எதிராக பொரிந்து தள்ளினார்.

தனது உரையில் நேதாஜி, வ.உ.சி, மற்றும் பாரதியாரை குறிப்பிட்டுப் பேசினார்.

logo
Newssense
newssense.vikatan.com