Iphone வாங்க 8 மாத குழந்தையை விற்ற ரீல்ஸ் தம்பதி; அதிர்ச்சி அடைந்த போலீசார் - எங்கே?
Iphone வாங்க 8 மாத குழந்தையை விற்ற ரீல்ஸ் தம்பதி; அதிர்ச்சி அடைந்த போலீசார் - எங்கே? ட்விட்டர்

Iphone வாங்க 8 மாத குழந்தையை விற்ற ரீல்ஸ் தம்பதி; அதிர்ச்சி அடைந்த போலீசார் - எங்கே?

அன்றாட தேவைகளுக்கே அல்லாடி வரும் இந்த தம்பதியின் கைகளில் அதிக விலையுடைய ஐஃபோன் இருப்பது அக்கம்பக்கத்தினரை சந்தேகமடையச் செய்துள்ளது.
Published on

ஐஃபோன் வாங்குவதற்காக தங்களின் 8 மாத குழந்தையை விற்றுள்ளனர் மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதியினர். இந்த செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜெயதேவ் சதி தம்பதி. அங்கு பனிஹாட்டி காந்திநகர் பகுதியில் வசித்துவரும் இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதமே ஆன ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் 8 மாத குழந்தை கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை. ஆனால் இவர்களிடம் மிகவும் விலையுயர்ந்த ஐஃபோன் ஒன்று இருந்துள்ளது

அன்றாட தேவைகளுக்கே அல்லாடி வரும் இந்த தம்பதியின் கைகளில் அதிக விலையுடைய ஐஃபோன் இருப்பது அக்கம்பக்கத்தினரை சந்தேகமடையச் செய்துள்ளது.

கிட்ட தட்ட ஒரு வாரக் காலமாக குழந்தையை காணவில்லை, ஆனால் ஊரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இவர்கள் வித விதமாக ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் சந்தோஷமாக பகிர்ந்துள்ளனர்.

சந்தேகம் வலுவடைந்த நிலையில், ஜெயதேவ் சதி தம்பதியினரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது ஐஃபோன் வாங்குவதற்காக தங்களின் மகனை வேறொருவரிடம் விற்றதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும் தங்களின் 7 வயது மகளையும் இவர்கள் விற்க முயன்று முடியாமல் போந்தையும் தம்பதி தெரிவித்துள்ளனர்.

Iphone வாங்க 8 மாத குழந்தையை விற்ற ரீல்ஸ் தம்பதி; அதிர்ச்சி அடைந்த போலீசார் - எங்கே?
டிக்கெட் எடுக்க மறுப்பு: குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற தம்பதி - எங்கே?

அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். கர்தா என்ற பகுதியில் ப்ரியங்கா என்ற பெண்ணிடம் இருந்து போலீசார் குழந்தையை மீட்டனர்.

தம்பதியை கைது செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் இருந்தும் இந்த வழக்கை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இணையம், தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி, பிரபலமடைய வேண்டும் என்ற ஒரு வித மோகத்தை மக்கள் மனதில் திணித்து வருகிறது. இதனால் எந்த எல்லைக்கும் செல்ல சிலர் தயாராக இருப்பது அச்சத்தை விளைவிக்கிறது!

Iphone வாங்க 8 மாத குழந்தையை விற்ற ரீல்ஸ் தம்பதி; அதிர்ச்சி அடைந்த போலீசார் - எங்கே?
இந்தோனேசியாவுக்கு Honey moon சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த புதுமண தம்பதி பலி - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com