வீடுகளை அலங்கரிக்க ஏன் 'மா இலை' பயன்படுத்தப்படுகிறது? அறிவியல் காரணம் என்ன?

தீபாவளி போன்ற பண்டிகையின் போது மா இலைகள் அலங்காரமாக பயன்படுத்தப்படுகிறது. வீட்டின் நுழைவாயில் மா இலைகள் தொங்கவிடப்படுகின்றன. ஆனால் எதற்காக மா இலைகள் பயன்படுத்தப்படுகிறது?
Why Mango Leaves Are Used To Decorate Homes In Festivals
Why Mango Leaves Are Used To Decorate Homes In FestivalsTwitter

மத நடைமுறைகளில், சுப நிகழ்ச்சிகள் மற்றும் பூஜை சடங்குகளின் போது விளக்குகள், பூக்கள், இலைகள் பயன்படுத்தப்படுகிறது. இவை ஆழமான ஜோதிட மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

அவை நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் மற்றும் எதிர்மறை தாக்கங்களைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. தீபாவளி போன்ற பண்டிகையின் போது மா இலைகள் அலங்காரமாக பயன்படுத்தப்படுகிறது.

மா இலைகள் அலங்காரத்தில் பயன்படுத்துவதை 'தூய்மை' எனக் கருதுகின்றனர். வீட்டின் நுழைவாயில் மா இலைகள் தொங்கவிடப்படுகின்றன.

இந்தச் செயல் எதிர்மறையான தாக்கங்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு அம்சமாக செயல்படுவதாகவும், நேர்மறைத் தன்மையைக் கொண்டுவருவதாகவும், வீட்டிற்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதாகவும் நம்பப்படுகிறது.

மா இலைகள் இந்து மதத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. வழிபாடு மற்றும் புராண நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன.

விஞ்ஞான கண்ணோட்டத்தில், மா இலைகள் சுற்றுச்சூழல் சுத்திகரிப்புக்கு பங்களிக்கின்றன, அதுமட்டுமில்லாமல் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகின்றன.

Why Mango Leaves Are Used To Decorate Homes In Festivals
தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? இந்து பண்டிகை பற்றிய 6 புராணக் கதைள்

மா இலை தவிர சாமந்தி பூக்கள் பயன்படுத்தப்படுகிறது. இது சூரிய கடவுளின் அடையாளங்களாக போற்றப்படுகின்றன. அவை ஒளி மற்றும் பிரகாசத்தை பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது.

சமஸ்கிருதத்தில், அவை 'ஸ்தலபுஷ்பா' என்று குறிப்பிடப்படுகின்றன . இப்படி சாம்மந்தி பூ வைத்து வழிபடுவதால் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை ஊட்டுவதாகவும், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.

ஆன்மீக முக்கியத்துவத்திற்கு அப்பால், சாமந்தி பூக்கள் அறிவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவற்றின் வாசனை மூலம் ஒருவரின் அமைதியை மேம்படுத்துகின்றன. மேலும் கிருமி நாசினி பண்புகளைக் கொண்டுள்ளன. தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலுக்கு இந்த சாமந்தி பூக்கள் பங்களிக்கின்றன.

Why Mango Leaves Are Used To Decorate Homes In Festivals
Thanjavur: ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com