5 நாட்களுக்கு நிர்வாணமாக வாழும் பெண்கள்; விநோத சடங்கை பின்பற்றும் இந்திய கிராமம் - ஏன்?

இந்த 5 நாட்களிலும் பெண்கள் யாரும் ஆடை அணியக்கூடாது. சிறுமியர் தொடங்கி பெரியவர் வரை அனைவரும் நிர்வாணமாக தான் இருக்கவேண்டும். இந்த ஐந்து நாட்களிலும் பெண்கள் யாரும் சிரிக்கக்கூடாது.
5 நாட்களுக்கு நிர்வாணமாக  வாழும் பெண்கள்; விநோத சடங்கை பின்பற்றும் இந்திய கிராமம் - ஏன்?
5 நாட்களுக்கு நிர்வாணமாக வாழும் பெண்கள்; விநோத சடங்கை பின்பற்றும் இந்திய கிராமம் - ஏன்?ட்விட்டர்

இமாச்சல பிரதேசத்தில் பெண்கள் ஆடை அணியாமல் 5 நாட்கள் நிர்வாணமாக இருக்கும் விநோத பழக்கம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பல மொழிகள், பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் இந்தியாவில் வித விதமான கலாச்சரங்களும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அப்படி இமாச்சல பிரதேசத்தில் கொண்டாடப்படும் திருவிழா ஒன்றிலும் வித்தியாசமான சடங்கு ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது.

குலு மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பினி என்கிற கிராமம். இந்த கிராம மக்கள் லாஹு கோண்ட் என்ற தெய்வத்தை வழிபாடு செய்கின்றனர்.

பாத்ரப் என்ற மாதத்தின் முதல் நாளில் இந்த லாஹு கோண்ட் கடவுள் அரக்கனை கொன்றது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் 5 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த 5 நாட்களிலும் பெண்கள் யாரும் ஆடை அணியக்கூடாது. சிறுமியர் தொடங்கி பெரியவர் வரை அனைவரும் நிர்வாணமாக தான் இருக்கவேண்டும். இந்த ஐந்து நாட்களிலும் பெண்கள் யாரும் சிரிக்கக்கூடாது.

இதனால், ஐந்து நாள் திருவிழா முடியும் வரை வீடுகளுக்குள் இவர்கள் பூட்டிவைக்கப்படுகின்றனர். ஊரிலுள்ள ஆண்கள் யார் கண்களிலும் இவர்கள் படக்கூடாது.

5 நாட்களுக்கு நிர்வாணமாக  வாழும் பெண்கள்; விநோத சடங்கை பின்பற்றும் இந்திய கிராமம் - ஏன்?
ஜப்பானில் கொண்டாடப்படும் நிர்வாண விழா - வினோத வழக்கத்தின் பின்னணி என்ன?

பெண்களின் ஆடைகளை கிழித்து அவர்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்த அரக்கனை இந்த லோஹு கோண்ட் கடவுள் கொன்றதனால், பெண்கள் இந்த ஐந்து நாட்களும் நிர்வாணமாக இருக்கிறார்கள்.

பெண்கள், ஆடைகளை களைந்த பிறகு கம்பளியால் ஆன பட்டாக்களை (சிறிய துணி) வைத்து உடலை மறைத்துக் கொள்கின்றனர்.

எனினும், காலப்போக்கில் பெண்கள் முழுவதுமாக நிர்வாணமாக இருப்பதை விரும்பவில்லை. அதனால், மிக மெலிதான ஆடைகளை இவர்கள் அணியத் தொடங்கினர். ஆனால், வயது முதிர்ந்த பெண்கள் இன்றும் நிர்வாணமாக இருக்கும் வழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர் என நியூஸ் 18 தளம் கூறுகிறது

இருப்பினும், இந்த சடங்கு ஆண்டுதோறும் பினி கிராமத்தில் இன்றுவரை பின்பற்றப்பட்டு தான் வருகிறது.

5 நாட்களுக்கு நிர்வாணமாக  வாழும் பெண்கள்; விநோத சடங்கை பின்பற்றும் இந்திய கிராமம் - ஏன்?
புத்தாடை, விருந்து, பரிசுகள் - இறந்தவர்களை கொண்டாடும் விநோத சடங்கு - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com